(இ-ள்.) வரிசையால் - சிறப்பினால், உயர் - மேம்பட்ட, அநேகம் மண்டலம் மகீபர் - பல மண்டலிகரான அரசர்கள், சொன்ன-, சொல் - சொல்லை, மறுக்கின்உம்- மறுத்தாலும், பரசுராமன்-, அருள்- கூறுகின்ற, மொழி-பேச்சை, மறான்- (வீடுமன்)மறுக்கமாட்டான்: (ஆகையால்), -நீ-, அவனது இருபதத்திடை பணிந்து - அந்தப்பரசுராமனுடைய உபயபாதங்களிலே நமஸ்கரித்து, உரைசெய்தால் (உன் குறையைச்)சொன்னால், அவன் உரைத்த சொல்லின் வழி - அந்தப் பரசுராமன் கூறியபேச்சின்வழியே, ஒழுகிவந்து - நடந்துவந்து, நினை - உன்னை, உவகையால் -மகிழ்ச்சியோடு, விரை செய் மாலை புனையாது - நறுமணங்கமழ்கின்ற மணமாலைசூட்டாது, வீடுமன்-, மீளஉம் - மீண்டும், மறுத்து விளம்பும் ஏல் - மறுத்துக்கூறுவானானால்,- (எ-று.)- விளம்புமேல் என்பது, அடுத்த செய்யுளில் "பெருந்தவம்புரிதி" என்பதனோடு இயையும். குரு ஆதலால் பரசுராமன் மொழியை வீடுமன் மறுக்க மாட்டா னென்று காசிராசன் கருதினான். (141) 134.- அம்பை பரசுராமனிருக்குமிடத்தைச் சார்தல். பின்னையெண்ணியபெருந்தவம்புரிதி யென்றுகூறியபிதாவையும் அன்னைதன்னையும்வணங்கிநீடுசது ரந்தயானமிசையம்புயப் பொன்னைவென்றொளிகொள்சாயலாளிரு புறத்துமாதர்பலர்பொலிவு தன்னைவந்துபுடைசூழவேகியம தங்கிமைந்தனகர்சாரவே. [டன் |
(இ -ள்.) பின்னை- பிறகு, எண்ணிய - (நீ) நினைத்துள்ள, பெருந்தவம் - மிக்கதவத்தை, புரிதி - செய்வாய், என்று-, (கூறினான்); கூறிய - (அங்ஙனம்) சொன்ன,பிதாவைஉம் - தகப்பனையும், அன்னை தன்னைஉம் - தாயையும், வணங்கி-, நீடு -நீண்டுள்ள, சதுரந்தயானம் மிசை - பல்லக்கின்மீது, அம்புயம் பொன்னை வென்று ஒளிகொள் சாயலாள்- தாமரைமலரில் வாழ்பவளான இலக்குமியைச் சயித்துஒளியைக்கொண்ட மெல்லியலான அம்பை, மாதர்பலர் - பலமங்கைமார், தன்னை-,வந்து- அடைந்து, இருபுறத்துஉம்-, பொலிவுடன்- அழகாக, புடைசூழ - சூழ்ந்திருக்க,ஏகி - (அங்கு நின்றும்) போய், யம தங்கி மைந்தன் - சமதக்கினிமுனிவனுடையகுமாரனாகிய பரசுராமன், நகர் - இருக்குமிடத்தை, சார - போய்ச்சேர,- (எ-று.) 'புகல"(135) என இயையும். 132- ஆம் கவியில்வந்த "தந்தை" என்பதற்கு முடிக்குஞ் சொல் வேண்டி, 'என்று' என்பதன்பின் 'கூறினான்' என்று வருவிக்கப்பட்டது. இங்ஙன் முடிக்காவிடின்இச்செய்யுளில் 'பிதாவை' என வருவதனால் அந்தச்செய்யுளில் நின்ற 'தந்தை' என்பதுபயனின்றா யொழியும். யமதங்கி = ஜமதக்நி. (142) 135.- அம்பை பரசுராமனை யடைந்து தன்குறையைத் தெரிவிக்க, அவனும் அவள்குறையை முடிப்பதாக உறுதிகூறல். காசிராசன்மகளென்றுவந்தனளொர் கன்னியென்றுகடைகாவலோர் வாசநாறுதுளவோனுடன்புகல வருகவென்றபின்மடந்தைபோய் ஆசினாலுரைவகுத்துமுற்செய லனைத்துமண்ணலடிதொழுதுபின் பேசினாளவனும்யாமுடிக்குவமி தென்றுமெய்ம்மையொடுபேசினான். |
|