(இ -ள்.) கடை காவலோர் - வாயிற்காவலர், வாசம் நூறு துளவோனுடன் - நறுமணம் வீசுகின்ற திருத்துழாய்மாலையை யணிந்த பரசுராமனிடத்து, காசிராசன் மகள்என்று ஓர் கன்னி வந்தனள் என்று புகல - காசிராசன் பெண்ணென்று ஒருகன்னிகைவந்துள்ளாளென்றுசொல்ல,- (அந்தப்பரசுராமன்), வருக என்று பின்- 'வருவாயாக' என்று சொன்ன பின்பு, மடந்தை - இந்தப் பெண், போய்- (பரசுராமனிருக்குமிடஞ்)சென்று, முன் ஆசினால் உரை வகுத்து - முதலில் வாழ்த்தினால் பேசி [வாழ்த்தி], பின்- பிறகு, அண்ணல் அடிதொழுது - பெருமையிற் சிறந்தோனாகியஅந்தப்பரசுராமனுடைய பாதங்களில் வணங்கி, செயல் அனைத்துஉம் பேசினாள் -(முன்னே) நிகழ்ந்த செய்திகளையெல்லாஞ் சொன்னாள்; அவன்உம் -அந்தப்பரசுராமனும், இது - இந்தஉன்கருத்தை, யாம்-, முடிக்குவம் -நிறைவோற்றுவோம், என்று-, மெய்ம்மையொடு - உறுதியாக, பேசினான்-சொன்னான்; முன்நிகழ்ந்தது - மணமாலையைச் சாலுவனுக்குச் சூட்டக் கருதியது முதலியன. ஆசினால் - விரைவோடுஎன்பாருமுளர். (143) 136.- பரசுராமன் அம்பையுடன் வீடுமனதுநகரைச் சேர அன்னான் எதிர்கொண்டு அப்பரசுராமனை வணங்குதல். வரதன்வீரமழுவாலநேககுல மன்னர்வேரறமலைந்தகோன் இரதமீதவளுடன்கணப்பொழுதி னேறியையிருதினத்தினில் விரதமாபரணமெனவணிந்ததிறல் வீடுமன்பதியின்மேவலும் சரதமாகவெதிர்கொண்டவன்சிர மிவன்பதத்தினிடைசாத்தினான். |
(இ-ள்.) வரதன் - (வேண்டுவார்க்கு வேண்டிய) வரத்தைக் கொடுப்பவனும், வீரம்மழுவால் அநேக குலம் மன்னர் வேர் அறமலைந்த கோன் - வீரத்தோடுகூடியமழுப்படையால் பலகுலத்தில் தோன்றிய அரசரும் வமிசநாசமாகுமாறு பொருததலைவனுமாகிய அந்தப்பரசுராமன், கணம் பொழுதின் - ஒருகணப்போதிற்குள்ளே,இரதம்மீது - (தன்) தேரின்மீது, அவளுடன் - அந்த அம்பையுடனே, ஏறி-,- ஐ இருதினத்தினில் - பத்துத்தினங்களில், விரதம் ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் -விரதத்தையே ஆபரணமாகப் பூண்ட வலிமையுள்ள வீடுமனுடைய, பதியின் -பட்டணத்திலே [அஸ்திநாபுரியிலே], மேவலும் - சேர்ந்தவுடனே,- சரதம் ஆக -(மனத்தில்) அன்புதோன்ற, எதிர் கொண்டு-, அவன் - அவ்வீடுமன், சிரம் - (தன்)சிரசை, இவன் பதத்தினிடை - இந்தப் பரசுராமன் பாதத்திலே, சாத்தினான் -சேர்த்தினான்; (எ-று.) சரதம் - உண்மையென்பாருமுளர்; மூன்னையபொருளில், ஸரஸ மென்ற வடசொல்லின் விகாரம். (144) 137.- வீடுமன் பரசுராமனை யுபசரித்தபின், பரசுராமன் அம்பையை மணந்துகொள்ளுமாறு வீடுமனிடம் கூறுதல். தனக்குவின்மைநிலையிட்டகோவையொரு தமனியத்தவிசில்வைத்துநீ, எனக்குநன்மைதரவந்தநற்றவ மிருந்தவாவெனவிருந்தபின், கனக்கும்வெண்டரளவடமுலைப்பெரிய கரியகண்ணியிவள் காதலால், உனக்குமன்றல்பெறவுரியளாகுகென வுவகையோடவனுரைக்கவே. |
|