பக்கம் எண் :

82பாரதம்ஆதி பருவம்

141.- 'விரதந்தவறுவதைவிடக் குருவுடன்பொருது
மாண்டாலும் நன்று' என்று வீடுமனும் பொருமாறு
தேரிலேறுதல்.

வெருவுடன்றொழுதுகங்கைமைந்தனடி வீழவுஞ்சினமிகுத்தலால்
உருவுடன்றனியிருக்குநீள்விரதம் வழுவிநானரகமுறுவதின்
குருவுடன்பொருதுமடிதனன்றென நினைந்துதாலமுயர்கொடியினன்
செருவுடன்றிடுதலுன்னியேறின னமைந்துநின்றதொருதேரின்மேல்.

     (இ-ள்.) கங்கைமைந்தன் - கங்காதேவியின்குமாரனான வீடுமன்,
வெருவுடன் -அச்சத்துடனே, தொழுது - வணங்கி, அடிவீழஉம் - (தன்)
பாதத்தில் வீழ்ந்துவேண்டவும்,- (பரசுராமன்), சினம் - (தன்) வெகுளியை,
மிகுத்தலால் - மிகுதியாகக்கொண்டிருந்ததனால்,- 'உருவுடன் - (பிறருக்கு)
அச்சந்தோன்றும் நிலையுடனே, தனிஇருக்கும் - ஒப்பற்றுள்ள, நீள் - சிறந்த,
விரதம் - நோன்பை, நான்-, வழுவி- தவறி,நரகம் உறுவதின் - நரகத்தை
யடைவதைக் காட்டிலும், குருவுடன் பொருது மடிதல்நன்று - (என்)
ஆசிரியனோடு போர்செய்து இறந்திடுதல் சிறந்ததாகும், ' என - என்று,
தாலம் உயர் கொடியினன் - பனைமரத்தை யெடுத்து (த் தூக்கி)க்கட்டிய
கொடியையுடையவனாகிய அந்த வீடுமன், நினைந்து-, செரு உடன்றிடுதல்
உன்னி -போரினால் மாறுபடுதலைக் கருத்துட்கொண்டு, அமைந்து நின்றது ஒரு
தேரின்மேல் -சித்தமாகஇருந்ததொரு தேரின்மேலே, ஏறினன்-; (எ-று.)-
"உருவுட்காகும்" என்பது,தொல்காப்பியம்.

142.- இதுவும் அடுத்த கவியும் - ஒருதொடர்: பரசுராமனை
வீடுமன் வென்றிட, அவ்விருவருந் தம்மிருப்பிடஞ்சேர்
தலையும், அம்பை தவவனமடைந்தமையையும் கூறும்.

அவ்விராமனுமறுத்தமன்னவனு மையிரண்டுதினமிகலுடன்
வெவ்விராவுமொழியாதுவெஞ்சமர் விளைத்தகாலையடல்வீடுமன்
கைவிராயசிலையோடுமெய்வலி கவர்ந்துமுன்றளர்வுகண்டபோர்
அவ்விராமனிகரென்னுமாறிவனை யஞ்சிநின்றெதிரடர்க்கவே.

     (இ-ள்.) அ இராமன்உம் - (அம்பையை மணந்துகொள்ளுமாறு கூறிய)
அந்தப்பரசுராமனும், மறுத்த மன்னவன்உம் - (அச்சொல்லை) மறுத்துக்கூறிய
க்ஷத்திரியனான வீடுமனும், ஐ இரண்டு தினம் - பத்துநாள், இகலுடன் -
மாறுபாட்டினுடனே, வெவ் இரா உம் ஒழியாது - கொடிய இரவிலுங்கூட
நீங்காமல்[இரவும் பகலுமாக], வெம்சமர் - கொடியபோரை, விளைத்தகாலை-,-
அடல் வீடுமன் -வலிமை பொருந்திய வீடுமன், முன் - முன்பு, கை விராய
சிலையோடு - கையிற்பொருந்திய வில்லின்மூலமாக, மெய் வலி கவர்ந்து -
(அந்தப் பரசுராமனுடைய)உடல்வலிமையைப் பறித்துக் கொண்டு, தளர்வுகண்ட -
தளர்ச்சியையுண்டாக்கிய, போர்- போரில்வல்ல, அ இராமன் நிகர் -
அந்தத்தசரதராமன் நிகராவான், என்னும் ஆறு- என்று (கண்டவர்) சொல்லுமாறு,
(அப்பரசுராமன் வலிமையைக் கவர்ந்திடப்பிறகுஅவ்விராமன்),- இவனை- இந்த
வீடுமனை, எதிர் அடர்க்க அஞ்சிநின்று - எதிர்த்துப்பொருதற்கு