வாழ்த்தி வாழ்த்தி- பலமுறைவாழ்த்தி,-தூய செம் பரு மணி சுடரும் மாளிகை ஏயினள் - சுத்தமான [குற்றமில்லாத]சிவந்த பருத்த இரத்தினங்கள் பதிக்கப்பட்டு விளங்குகிற (தன்) இருப்பிடத்துக்குச்சென்றாள்;(எ-று.)
ஆயிரம் பதின்மடங்காக - தேவேந்திரனைவிடப்பதினாயிரம்பங்கு அதிகமாக என்றுமாம். வாழ்த்தி வாழ்த்தி - அடுக்கு, பன்மைப்பொருளது. மாளிகை - அந்தப்புரம். இந்திரனி தயம்போன்றுளாள் என்பதற்கு - கணவனது கருத்துக்குச் சிறிதும் மாறுபடாமலொழுகுபவளென்று கருத்து. சக்களத்திமக னென்று சிறிதும் வெறுப்புறாமல்அருச்சுனனிடத்து இந்திராணி மிக அன்பு பாராட்டியதனால்,இங்ஙனங் கூறினார். இதற்கு அருச்சுனனை மானிடனெனக்கருதாது தேவேந்திரன்போலக் கருதி உபசரித்தாளென்றலுமுண்டு. (143) 144.-அத்தேவலோகத்தில் பலவகையொலி அப்போது ஒலித்தல். அந்தரதுந்துபி யதிரும்பேரொலி முந்தியமறையொலி முழங்குஞ்சங்கொலி சிந்துரமதகிரி சீறுநீடொலி சுந்தரமுகிலொலி தூங்கத்தூங்குமால். |
(இ - ள்.)(அத்தேவலோகத்தில்), அந்தர துந்துபி அதிரும் பேர் ஒலி - மேலுலகத்திற்குஉரிய பேரிகைவாத்தியங்கள் முழங்குகின்ற பேரோசையும், முந்திய மறை ஒலி - தலைமைபெற்றவேதங்களின் பாராயண ஓசையும், சங்கு முழங்கும் ஒலி - சங்கங்கள் ஒலிக்கின்ற ஒலியும், சிந்துரம் மத கரி சீறு நீடு ஒலி - சிந்தூரத்திலகமணிந்த மதம்பிடித்த யானைகள்சினந்து பிளிறுகின்ற மிகுந்த ஓசையும், (என்னுமிவை), சுந்தரம் முகில் ஒலி தூங்க - அழகான மேகங்களின் ஓசை ஒடுங்கும்படி, தூங்கும் - (அதனினும்) மிக்கு ஒலிக்கும்;(எ - று.) சிந்துரம்மதகரி - சிந்தூரமென்னும் பெயரையுடைய யானையெனினுமாம். சீறும் என்றும் பிரிக்கலாம். தூங்கும் - செய்யுயென்முற்றுப் பலவின்பாலுக்கு வந்தது. துந்துபி முதலியவற்றின் ஒலிக்குள் மேகத்தின் ஒலி அடங்குமென்று கூறியது - மறை வணியாம்: வடநூலார் மீலி தாலங்காரமென்பர். (144) 145.-அருச்சுனன்முடியில் கற்பகம் பூமாலையிடுதல். பத்திகொணவமணி பயின்றுசெந்துகிர்க் கொத்தொளிர்தளிருடன் குலாவுகற்பகம் சித்திரவிசயவில் விசயன்சென்னிமேல் வைத்ததுமுருகவிழ் வாசமாலையே. |
(இ - ள்.) பத்தி கொள் - வரிசையாயிருத்தலைக்கொண்ட,நவமணி - ஒன்பதுவகை யிரத்தினங்களில், பயின்று - நிறைந்து, செம் |