(தனது) அழகியதேருடனே, அடைந்தான்-சேர்ந்தான் [அஸ்தமித்தான் என்றபடி];(எ-று.) 'அதுகண்டு'என்றதனால்,ஏதுத்தற்குறிப்பேற்றவணி தோன்றுகின்றது. தேர் என்றது - மண்டலத்தை. குடக்கு+கடல்=குடகடல்: திசைப்பெயரோடு பிறபெயர் சேர்ந்தபோது நிலைமொழியின்ஈற்றுயிர்மெய்யும் ககரவொற்றும் நீங்கின. (155) 156.-சந்திரோதயவருணனை. மேலைத்திசைகாலைச்சுடர்வீழ்தந்திடுமுன்னம் மாலைச்சுடர்காலைத்திசைவாழ்வுற்றிடவந்தான் சோலைத்தருவருள்வாரிதிசூழ்வான்முகடேறிப் பாலைப்பொழிவதுபோனிலவொளிகொண்டுபரப்பா. |
(இ-ள்.) காலைசுடர்-காலையிலுதிக்கும்ஒளியாகிய சூரியன், மேலை திசை - மேற்குத்திக்கில், வீழ்தந்திடும் முன்னம் - விழும் முன்னே, [அஸ்தமித்தவளவில்],மாலைசுடர் - சாயங்காலத்தில் விளங்கும் ஒளியாகிய சந்திரன்,-சோலைதரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி பாலை பொழிவது போல்-கற்பகச்சோலையைப்பெற்ற பாற்கடலானது (உலகத்தைச்) சூழ்ந்துள்ள ஆகாயமுகட்டிலே யேறிநின்று பாலைப்பொழிவதுபோல, நிலவுஒளி கொண்டு பரப்பா - (தனது) நிலாவாகிய ஒளியைக் கொண்டு பரப்பி, காலைதிசை - உதயகாலத்திற்கு உரிய கிழக்குத்திக்கில், வாழ்வு உற்றிட - வாழ்ச்சி பொருந்த, வந்தான் - உதித்தான்;(எ-று). பாற்கடல்கடைந்தகாலத்தில் கற்பகவிருட்சமும் காமதேனுவும் சிந்தாமணியும் முதலியன அதனினின்று தோன்றின. வாரிதி - நீர் தங்குமிடம்: வாரி - நீர்: வாரிதி - இங்கே, பாற்கடலைக்காட்டிற்று. ஒளிகொண்டு பரப்பா - ஒளியாற் பரப்பியென்றும், ஒளியைப் பரவச்செய்துகொண்டு என்றுமாம். வாழ்வுற்றிட - யாவரும் மகிழ்ச்சியடைய எனினுமாம். பின்னிரண்டடி-தன்மைத்தற்குறிப்பேற்றவணி. (156) 157.-இதுவும்அடுத்த கவியும் - ஒருதொடர்:உருப்பசி வேட்கை கொண்டுஅருச்சுனனுள்ள இடத்துக்கு வருதலைக்கூறும். அந்தச்சிலைமகவான்மகனம்மாளிகையிடையே முந்துற்றதொர்தவிசிற்கரு முகில் போலவிருந்தான் கந்தர்ப்பன்வெகுண்டேவிய கணைபட்டுளமுருகா நொந்துற்றுமுனடனம்புரி நுண்ணேரிழையங்கண். |
(இ-ள்.) சிலை- விற்போரிற் சிறந்த, அந்த மகவான் மகன் - இந்திரகுமாரனானஅந்த அருச்சுனன், அ மாளிகை இடையே-(இந்திரனால் தனக்குத் தனியே கொடுக்கப்பட்ட) அவ்வீட்டினிடத்திலே, முந்து உற்றது ஒர் தவிசில் - முன்னே பொருந்தியதொரு ஆசனத்தில், கரு முகில் போல - கரிய மேகம்போல, இருந்தான் - |