பக்கம் எண் :

114பாரதம்ஆரணிய பருவம்

வீற்றிருந்தான்;(அப்பொழுது), முன் நடனம் புரி - முன்னே
நர்த்தனத்தைச்செய்து, நுண் நேர் இழை - சூட்சுமமாகவிளங்குகிற (தன்
அழகுக்கு) ஏற்ற ஆபரணங்களையுடையஊர்வசி,-கந்தர்ப்பன் வெகுண்டு
ஏவிய கணைபட்டு உளம் உருகா - மன்மதன் (கோபித்துத் தன்மேல்
அருச்சுனன் விஷயமாக) எய்த பாணங்கள் பட்டதனால்மனங் கரைந்து,
நொந்துற்று - (காம வேதனையால்)வருந்தி, அங்கண் - அவ்விடத்தில்,- 
(எ - று.)-"விசயன்னுழைவந்தாள்"என மேலிற் கவியில் முடியும்.

     நுண்ணேரிடைஎன்றபாடத்துக்கு, நுண் ஏர் இடை எனப் பிரித்து -
சிறுத்த அழகிய இடை என்க.  முந்துற்ற தொர்தவிசு - சிறப்புப்பெற்றதும்
ஒப்பற்றதுமாகிய ஆசனமெனினுமாம்.  கந்தர்ப்பன் என்பதற்கு -
இன்பமயமாகக் கொழுத்திருப்பவனென்று பொருள்.  உருகுதல் - மிக அன்பு
கொள்ளுதல். பட்டு - எச்சத்திரிபு.  நுண்ணேரிழை - அன்மொழித்தொகை.
மூன்றாமடியில்,கலகக்கணைபடவேஎன்றும் பாடம்.              (157)

158.அக்கங்குலினிடையேமல ரரிசந்தனவாசம்
மைக்கங்குனிகர்க்குஞ்செறி மலர்நீலமணிந்தாள்
உய்க்கும்பருமணிநீலித வுடையாடையுடுத்தாள்
மெய்க்குந்தவவயவாளிகொள் விசயன்னுழைவந்தாள்.

     (இ-ள்.) அகங்குலின் இடையே - அந்த இராத்திரியிலே, மலர் அரி
சந்தனம் வாசம் - விளங்குகின்ற செஞ்சந்தனத்தின் வாசனையான
குழம்பையும், மை கங்குல் நிகர்க்கும் செறி நீலம் மலர் - இருளையுடைய
இரவை யொக்கின்ற நெருங்கிய நீலோற்பல மலர்மாலைகளையும்,
அணிந்தாள் - அணிந்தவளாய்,-உய்க்கும்பரு மணி -(ஒளியை) வீசுகின்ற
பருத்த நீலரத்தினத்தையொத்த, நீலிதம் உடை ஆடை -
நீலநிறமூட்டப்பட்டுள்ள தானுடுத்தற்குரிய சேலையை,உடுத்தாள் -
உடுத்துக்கொண்டவளுமாய், மெய்க்கும் தவம் வயம் வாளி கொள் விசயன்
உழை - உண்மையான தவத்தினால்வெற்றியைத்தரவல்ல
பாசுபதாஸ்திரத்தைப்பெற்ற அருச்சுனனிடத்து, வந்தாள்-;(எ-று.)

     வந்தாள்என்பதற்கு, முன்செய்யுளிலுள்ள 'நுண்ணேரிழை'எழுவாய்.
கங்குலினிடை - இரவின்நடு: பாதிராத்திரி.  சந்தனவாசம் மலர்நீலம்
அணிந்தாள் - சந்தனம் பூசினாள்,மாலைசூடினாள்என
வெவ்வேறுவினைகளுக்குஉரிய இரண்டுபொருள்கள் கலந்து வந்து,
அணிந்தாள்என்னும் பொதுவினையைக்கொண்டன: [நன்.பொது.38]
முன்னிரண்டடிக்கு - அரிசந்தனமென்னுந் தேவதருவினது வீசுகின்ற
வாசனையையுடையஇரவையொத்த நெருங்கின நீலநிறமுள்ள
மலர்களைச்சூடினாளென்றுங்கொள்ளலாம்.  மணியென்பதற்கு -
இரத்தினாபரணமென்றுஉரைத்து அணிந்தாளென்னும் வினையோடு
இயைத்தலுமாம்.  பருமணிநீலமணிந்தாள் என்றும், புகைநிகர் நீலிதவுடை,
பரிமள நீலிதவுடைஎன்றும் பாடம்.                            (158)