பக்கம் எண் :

124பாரதம்ஆரணிய பருவம்

174.அன்னைநீயெவர்க்காயினுமாசையின்
இன்னறீர்ப்பதெவர்க்குமியல்பரோ
மன்னனாயினும்வான்பிழைசெய்தனன்
என்னநாகரவட்கிதங்கூறியே.

     (இ - ள்.)'நீஎவர்க்கு அன்னைஆயின்உம் - நீ யாருக்குத்
தாயாயிருந்தாலும், ஆசையின் இன்னல் தீர்ப்பது - (தெய்வமகளாகிய உனது)
காமநோயை (க் கலவியால்) தணியச்செய்ய வேண்டுவது, எவர்க்குஉம்
இயல்பு - ஆடவர்யாவர்க்கும் இயற்கையாம்;மன்னன் ஆயின்உம் -
(அருச்சுனன்) அரசகுலத்தில் தோன்றினவனானாலும்,வான் பிழை
செய்தனன் - (இது இயல்பென்று அறியாமல் உன் கருத்தை
நிறைவேற்றாமையாகிய)பெரிய தவற்றைச் செய்துவிட்டான்',என்ன -
என்று, நாகர் - தேவர்கள், அவட்கு இதம் கூறி - அவ்வூர்வசிக்கு
இன்சொற்களைச்சொல்லி,-(எ-று.)-"என்றுவானவர் யாவருமேத்த"என
176-ஆங் கவியோடு தொடரும்.

     முதலடி மூன்றாமடியில்,உம் - உயர்வுசிறப்பு.  இரண்டாமடியில்
முற்றுப்பொருளது.  அரோ -தேற்றமுணர்த்திற்று.             (174)

175.காமமிக்கவுன் கட்டுரைச்சாபநோய்
பூமிபொய்ப்பினும்பொய்ப்பதன்றாலரோ
வேய்மலர்த்தொடையானெஞ்சில்வேண்டுநாள்
ஆமவற்கிவ்வுருவருள்செய்திநீ.

     (இ - ள்.)காமம் மிக்க - புணர்ச்சிவிருப்பம் மிகுந்த, உன் - உனது,
கட்டு உரை - உறுதிவார்த்தையாகிய, சாபம் - சாபத்தினாலுண்டாகிய,நோய்
- (பேடித்தன்மையாகிய) வியாதி, பூமி பொய்ப்பின்உம் - நிலவுலகத்தார்
யாவரும் வார்த்தை தவறினாலும்,பொய்ப்பது அன்று - தவறுவதன்று;
(ஆயினும்), வேய் மலர் தொடையான் - சூடின பூமாலையையுடைய
அருச்சுனன், நெஞ்சில் வேண்டும் நாள் - மனத்தில் விரும்புங் காலத்தில்,
அவற்கு இஉரு ஆம்-அவனுக்கு இப்பேடிவடிவம் வரத்தகும்;நீ அருள்
செய்தி - நீ (இவ்வாறு) அனுக்கிரகஞ் செய்வாயாக;(எ-று.)

     முதலிரண்டடிக்கு- சலியாத நிலைமையுடையதாகியபூமி அந்நிலை
தவறிச் சலித்தாலும் உன் சாபநோய் நிலைதவறாதுஎன்றும் உரைக்கலாம்.
காமமாவது - ஒரு காலத்தில் ஒரு பொருளால் ஐம்புலன்களும்
அனுபவிக்குஞ்சிறப்புடையதான இன்பம்.  பொய்ப்பினும் என்ற உம்மை -
பொய்யாமை குறித்தலால், எதிர்மறைப் பொருளது.  ஆல், அரோ -
ஈற்றசைகள்.                                           (175)

176.-தேவர்களின்வேண்டுகோளின்படி
உருப்பசிஅருள்புரிதல்.

என்றுவானவர் யாவருமேத்தவே
அன்றவற்கவ் வரங்கொடுத்தாளவள்