தொகைநிலைத்தொடர்;செயப்படுபொருளில் வந்தது. வதைச் சருக்கம்- வதையைப்பற்றிய சருக்கம் என விரித்தால் இரண்டனுருபும் பயனும் உடன்தொக்க தொகையாம். வதம்-வதை என ஈறுதிரிந்தது:சாமரம்-சாமரை, காலம்-காலைஎன்பனபோல. இப்பிரிவுக்கு 'இரணியபுரவாசியர் வதைச்சருக்கம்'எனப் பெயரிட்டு வழங்கினாருமுளர்;தோயமாபுரவாசியர் வதையையும் முதலிலே முக்கியமாகக் கூறுகின்றதொரு பகுப்பிற்கு ஏகதேசத்தாற் பெயர்வைத்தல் பொருந்தாது. இச்சருக்கத்தில் முதல் 104- பாடல்கள் தோயமாபுரத்து அசுரரது வதத்தையும், அதற்குமேல் 42 செய்யுட்கள் இரணியபுரத்து அசுரர்களது வதத்தையும் உணர்த்துமென உணர்க. வடமொழி வியாசபாரதத்திலும் ஆரணிய பருவத்தினுள்ளடங்கிய நிவாதகவச யுத்தபருவத்தில் ஐந்து அத்தியாயங்களில் நிவாதகவசவதமும், ஓரத்தியாயத்தில் இரணியபுர தைத்தியவதமும் கூறப்பட்டுள்ளன. 1.*-உருப்பசியினிடம்வரம்பெற்றஅருச்சுனனை யுடன்கொண்டுஇந்திரன் சுதன்மையில் வீற்றிருத்தல். அவ்வரந்தனக்கு நல்கு மன்னைதாள்வணங்கும் வென்றிக் கைவரு சிலையினானைக்கடவுளர்க் கிறைவன் கொண்டு மொய்வருசுரர்கள் சூழ முதன்மைசேர் சுதன்மை யெய்தி வெவ்வரிமுகத்த பீடம் விளங்கவீற் றிருந்த காலை. |
இதுவும், மேற்கவியும்- ஒரு தொடர். (இ - ள்.) அவரம்-(பேடிவடிவம் தான் வேண்டுங்காலத்தில் ஒரு வருஷகாலம் வந்தடையும் என்ற) அந்த வரத்தை, தனக்கு நல்கும்-தனக்குக் கொடுத்த, அன்னை-தாயாகியஊர்வசியினது, தாள் - பாதங்களை, வணங்கும் - நமஸ்கரித்த, வென்றி கை வரு சிலையினானை- ஜயத்தைத் தருகின்ற (தன்) கையிற் பொருந்திய (காண்டீவமென்னும்) வில்லையுடைய அருச்சுனனை,கடவுளர்க்கு இறைவன் - தேவர்களுக்கு அரசனான இந்திரன், கொண்டு - அழைத்துக்கொண்டு, மொய் வரு சுரர்கள் சூழ - நெருங்கி வருகின்ற தேவர்கள் (தன்னைச்)சுற்றிலுமிருக்க, முதன்மை சேர் சுதன்மை எய்தி - (சபாமண்டபங்களெல்லாவற்றினுந்) தலைமைபெற்ற சுதர்மை என்னுந் தேவசபாமண்டபத்தை அடைந்து, வெவ் அரி முகத்த பீடம் விளங்க - கொடுந்தன்மையையுடைய _____________________________________________________ * இந்தச்சருக்கத்துக்குக் காப்புச்செய்யுளாக ஒரு சாரார் வழங்கிய பாடல் வருமாறு:- செய்யவாய்கரியவாட்கண் சிற்றிடைபெருந்தேரல்குல் துய்யவாய்மகடன்முன்றில் தொகுமருதிறுத்துத்தாரு வய்யமீமிசைநட்டோர்புள் வகிர்ந்துபொற்சிறைப்புள்ளூரும் அய்யனேயன்றோதொல்லையருமறைக்கிறுதியாவான். |