பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்13

லின் விகாரம்.  பண்பியைப் பண்பாகஉபசரித்து, 'வைகுதல்நன்மை'
எனப்பட்டது.  வைகுதலே நன்மையென்னும் பிரிநிலையேகாரம் விகாரத்தால்
தொக்கது.  யாகசேனன்-பாஞ்சாலதேசத்தரசன்: திரௌபதியின் தந்தை. (17)

18.- ஸ்ரீக்ருஷ்ணன்மொழிப்படி செய்து
கானில்வாழத் தருமன் விரும்பியது.

அச்சுதனுரைத்தமாற்ற மறன்சுதன்மகிழ்ந்துகேட்டு
மெய்ச்சுதர்முதலாமற்றும் விளம்பியகிளையையெல்லாம்
இச்சையின்படியேயாங்காங் கெய்துவித்தீராறாண்டும்
அச்சுறுகானில்வைகு மார்வமேயார்வமானான்.

     (இ-ள்.)அச்சுதன் - கண்ணபிரான், உரைத்த - சொன்ன, மாற்றம்-
வார்த்தையை, அறன் சுதன் - தருமபுத்திரன், கேட்டு-,மகிழ்ந்து-களித்து,
சுதர் முதல்ஆ மற்றுஉம் விளம்பிய மெய்கிளையை எல்லாம் -
புத்திரர்முதலாக மேலுஞ் சொல்லப்படுகிற தேக பந்துக்களை யெல்லாம்,
இச்சையின் படி ஏ-(கண்ணபிரானது)விருப்பத்தின்படியே, ஆங்கு ஆங்கு -
(அவர்சொன்ன)அவ்வவ்விடங்களில், எய்துவித்து-சேரும்படி யனுப்பிவிட்டு,
ஈர் ஆறு ஆண்டுஉம் - பன்னிரண்டு வருஷகாலமும், அச்சுஉறு கானில்
வைகும்-பயம்பொருந்திய வனத்தில் வாசஞ்செய்கிற, ஆர்வம்ஏ -
விருப்பத்தையே, ஆர்வம் ஆனான்-விருப்பமாக உடையனானான்; 

     இச்சையின்படியே - தன்விருப்பத்தின்படியே யென்றுமாம்.
அச்சுதன்=அச்யுதன்:  (தன்னைச்சரணமடைந்தவர்களை)
நழுவவிடாதவனென்றும், அழிவில்லாதவனென்றும் பொருள்படும்.
மெய்க்கிளை யென இயையும்:  உண்மையான அன்பையுடைய
பந்துக்களென்றும் பொருள் கொள்ளலாம்.  மெய்ச்சுதரென இயைத்து-
தங்களுடம்பினின்றுந் தோன்றிய புதல்வரென்றலும் ஒன்று.  அச்சு=அச்சம்:
முதனிலை திரிந்த தொழிற்பெயர்.                             (18)

19.-வந்தவர்யாவரும்தம்தம்நகர்க்குப் போய்விடப்
பாண்டவர் தம்வாழிடமாகக் காட்டைக்கொள்ளல்.

சோனைமாமுகிலின்மேனித் தோன்றலுந்துவரைபுக்கான்
ஏனையோர்தாமுந்தத்த மெயிலுடைநகரிபுக்கார்
ஞானயோகிகளுமொவ்வா நரேசனுந்தம்பிமாரும்
கானமேதாங்களாளுங் காசினியாகக்கொண்டார்.

     (இ-ள்.)சோனை - விடாமழைபொழிகின்ற மா-கருமையான, முகிலின் -
மேகம்போன்ற, மேனி - திருமேனிநிறத்தையுடைய, தோன்றல்உம் -
கண்ணபிரானும், துவரை புக்கான் - (தனது)துவாரகாபுரிக்குச்சென்று
சேர்ந்தான்; ஏனையோர் தாம்உம் - மற்ற அரசர் முதலியோரும், தத்தம்-
தங்கள் தங்களுடைய, எயில் உடை நகரி-மதில்களையுடைய
பட்டணங்களில், புக்கார்-சென்று சேர்ந்தார்கள்; ஞானயோகிகள்உம் ஒவ்வா
நரேசன்உம் - தத்துவஞானத்