6.-அதுகண்டுஇந்திராணி, 'ஒருமானுடனோடுஒக்கஉண் ணுதல் தகுமோ?' என்று சினந்து கூறுதல். அன்னதுநிகழ்ந்தகாலையவன்றிருத்தேவிகண்டு துன்னியகோபச்செந்தீ விழியுகச்சிலசொற்சொன்னாள் மன்னியபுவியில்வைகு மானுடமன்னன்வந்துன் தன்னுடனொக்கவுண்ணத்தக்கதோவுரைத்தியென்றே. |
(இ-ள்.)அன்னது நிகழ்ந்த காலை- அத்தன்மையதான செய்கை நடந்தபொழுதில்,-அவன்திரு தேவி - அவ்விந்திரனது அழகிய மனைவியானஇந்திராணி,-கண்டு- (அதனைப்)பார்த்து, துன்னிய கோபம் செம் தீ விழி உக - பொருந்திய கோபத்தினாலாகியசிவந்த நெருப்புப்பொறி கண்களின் வழியே சிந்தாநிற்க, 'மன்னியபுவியில் வைகும் - பொருந்திய பூலோகத்திலே வசிக்கின்ற, மானுட மன்னன் - மனிதனாகியஓரரசன், வந்து - (இங்கே) வந்து, உன்தன்னுடன் ஒக்க உண்ண தக்கதுஓ - உன்னுடனே ஒக்க இருந்து உண்ணுதல் தகுதியுடையதோ? உரைத்தி - சொல்வாய்,' என்று-,சில சொல் சொன்னாள்- (இந்திரனைநோக்கிச்) சில சொற்களைக் கூறினாள்;(எ-று.) கோபச்செந்தீவிழியுக என்பதற்கு-கோபமிகுதியால்நெருப்புப் போல கண்கள் மிகச்சிவக்க என்று கருத்து. புவி என்னுஞ்சொல், வடமொழியில் ஏழாம்வேற்றுமை. மானுடன்=மாநுஷன். மானுட மன்னன் - உயர்திணைப் பெயரீறு விகாரமாயிற்று;[நன்-உயிர்-9]உண்ணத்தக்கதோ - உண்ணத்தகுமோ;தகாதென்னும் பொருளைத்தந்ததனால்,ஓகாரம் - எதிர்மறை. செந்தீவிழியுகப்பொறாதுசொற்றாள்என்றும் பாடம். (182) 7.-இந்திரன்அருச்சுனனது பெருமையைச் சுட்டிக்காட்டி மானுடனென்றுஇவனையிகழலாகா தெனல். என்றலுங்கடவுள்வேந்த னிருபுயந்துளங்கநக்கு மன்றலந்துளபமாயோன் மைத்துனனெனக்குமைந்தன் கொன்றையஞ்சடையானோடுமமர்புரிகுரிசிறன்னை நன்றியின்மனிதனென்றிங் கிகழ்வதோநங்கையென்றான். |
(இ-ள்.)என்றலும் - என்று (இந்திராணி) சொன்னவளவில்,-கடவுள் வேந்தன் - தேவராசனானஇந்திரன், இரு புயம் துளங்க நக்கு - (தனது) இரண்டுதோள்களும் குலுங்கும்படி பெருஞ்சிரிப்புச் சிரித்து, (அவளை நோக்கி), 'நங்கை- பெண்களுட் சிறந்தவளே! மன்றல் அம் துளபம் மாயோன் மைத்துனன் - வாசனையையுடையஅழகிய திருத்துழாய் மாலையையுடையஸ்ரீகிருஷ்ண பகவானது அத்தைகுமாரனும், எனக்கு மைந்தன் - என்னுடைய மகனும், கொன்றை அம் சடையானோடுஉம்அமர் புரி குரிசில் தன்னை- கொன்றைப்பூமாலையையுடையஅழகிய (கபர்த்தமென்னுஞ்) சடையையுடைய பரமசிவனுடன் போர்செய்த வீரனுமாகிய |