யால்) செவிடுகளாகச்செய்ய,-(எ-று.)-'புக'எனமேற்கவியில் தொடரும். ஆர்ப்பொலி -இருபெயரொட்டுப் பண்புத்தொகை: ஆர்ப்பு- பேரிரைச்சல். பகிரண்டம் - வடசொற்றொடர். நாற்றிசை-கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்பன;தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு என்னும் கோணத்திசை நான்கும் இவற்றில் அடங்கும். செவிடு- செவிப்புலனற்றது: உறுப்புக் குறை எட்டினுள் ஒன்று. (218) 43.-ஓசையைக்கேட்டஅசுரர் இந்திரன் பொரவருகிறானென்றுசினங்கொள்ளுதல். அந்தவோசை யவுணர்செவிப்புக முந்தவோடி முடுகிமுறுவலித்து இந்திரன்பொர வந்தனனென்றுதம் சிந்தைகன்றி விழியுஞ்சிவந்திட்டார். |
(இ-ள்.) அந்தஓசை-தேரோசையோடு சேர்ந்த அந்த நாணோசை, முந்த - (சித்திரசேனனுக்கு) முற்பட, ஓடி - விரைந்து சென்று, அவுணர் செவி புக-அவ்வசுரர்களது காதிலே நுழைய, - (அவர்கள்), முடுகி-(தம்மில்) திரண்டு, முறுவலித்து - சிரித்து, இந்திரன் பொர வந்தனன் என்று- தேவேந்திரன் (தம்மோடு) போர் செய்தற்கு வந்தானாகுமென்று கருதி, (கோபத்தால்), தம் சிந்தை கன்றி-தங்கள் மனம் வெதும்பி, விழிஉம் சிவந்திட்டார்-(கண்களும்) சிவக்கப்பெற்றார்; (எ-று.) தேவேந்திரன்தேரில் மாதலி பாகனாகச்செலுத்தத்தேர் அதிர்ந்துவரும்போது, அவுணர், தோற்ற தேவேந்திரனே மீளவும் பொர வருகின்றானென்றுகருதிச் சினந்தனரென்க. இங்கே முறுவலித்தல் - வீரத்திலெழுந்த வெகுளி நகை. 'விழி' என்னும் அஃறிணையெழுவாய் 'சிவந்திட்டார்'என்னும் உயர்திணைமுற்றைக்கொண்டதனால்,விழியும் சிவந்திட்டார்: திணைவழுவமைதி;இதற்கு "உயர்திணைதொடர்ந்த பொருள்முத லாறும், அதனொடுசார்த்தினத்திணைமுடிபின" என்னுஞ் சூத்திரம், விதி. (219) 44.-சித்திரசேனனென்றதூதுவன் சில சொல்லுதல். போயதூதனுஞ் செம்பொற்புரிசைசூழ் தோயமாபுரந் தன்னிற்றுதைந்தவம் மாயவஞ்சர் மறுகவெம்புண்ணின்மேல் தீயையொப்பன சில்லுரைசொல்லுவான். |
(இ-ள்) போயதூதன்உம் - (முன்னே புறப்பட்டுச்) சென்ற தூதுவனான சித்திரசேனனும்,-செம்பொன் புரிசை சூழ் - சிவந்த பொன்னினாலாகிய மதில்கள் சூழ்ந்துள்ள, தோயமாபுரந்தன்னில்-பெரிய தோயமாபுரத்திலே, துதைந்த-நிறைந்த, அ மாயம் வஞ்சர்- |