பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்165

வேறு.

57.-அருச்சுனனும்அவர்கள்மீது கணைதூவுதல்.

அக்கார் முகவீ ரனுமங் கவர்தம்
மைக்கார் முகிலென் னவழங் கியதிண்
மெய்க்காய் கணைசாபம்விசித் துவிடா
நக்கா னிவைநின் றுநவின் றனனே.

     (இ-ள்.) அகார்முகம் வீரன்உம் - வில்வீரனாகியஅவ்வருச்சுனனும்,
அங்கு-அப்பொழுது, அவர்தம்-அவ்வசுரர்களது, மை கார் முகில் என்ன
வழங்கிய-கரிய கார்காலத்து மேகமென்று (உவமை) சொல்லப்பட்ட, திண்
மெய்-வலிய உடம்புகளை,காய்-அழிக்கும்படியான, கணை-அம்புகளை,
சாபம் விசித்து - வில்லிற் பதியவைத்து, விடா-(அவர்கள்மேற்) பிரயோகித்து,
(அவர்களைநோக்கி), நக்கான்-சிரித்து, நின்று-(சலியாமல் எதிர்) நின்று,
இவை நவின்றனன்-இவ்வார்த்தைகளைக்கூறினான்;(எ-று)-அவற்றை
மேலிரண்டுகவிகளிற் கூறுகின்றார்.

     கார்-பெய்யும்பருவத்துக்கு ஆகுபெயர். எதுகைநயம்நோக்கி
'மெய்க்காய்'என வலி மிக்கது.

     இதுமுதற்பதினெட்டுக்கவிகள் - பெரும்பாலும் எல்லாச்சீர்களும்
மாச்சீர்களாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தங்கள்.

58.-இரண்டுகவிகள்- அருச்சுனனுடைய வீரவாதம்.

திக்கோடியநுந் திறலும்புகழும்
தொக்கோடி யுடற்றுபடைத்தொகையும்
கைக்கோடியவெஞ் சிலையின்கணையான்
முக்கோடியுமின் றுமுருக்குவனால்.

இதுமுதல்நான்குகவிகள் - ஒரு தொடர்.

     (இ-ள்) நும் -உங்களுடைய, திக்கு ஓடிய - எல்லாத்திசைகளிலும்
பரவிய, புகழ்உம்-கீர்த்தியையும், திறல்உம் - யுத்த சாமர்த்தியத்தையும்,
தொக்கு ஓடி உடற்று படை தொகைஉம் - திரண்டு விரைந்துவந்து
(பகைவர்களைப்)பொருது அழிக்கின்ற சேனைகளின்கூட்டத்தையும், மு
கோடிஉம் - மூன்று கோடியென்னுந் தொகையையும், கை-(எனது)
கையிலுள்ள, கோடிய-வளைந்த,வெம் - கொடிய, சிலையின்- வில்லினின்று
(எய்யப்படுகிற), கணையால்- அம்புகளினால்,இன்று - இப்பொழுதே,
முருக்குவன் - அழிப்பேன்;(எ-று.)

    புகழாவது-இம்மைப்பயனாய்இவ்வுலகத்தில் நிகழ்ந்து என்றும்
இறவாமல் நிற்குங் கீர்த்தி.  படை - ஆயுதமுமாம்.               (234)

59.முன்போர்தொறும்வந்து முனைந்துவெரீஇ
வென்போகியவிண் ணுறைவீரரலேன்
பொன்போலுநும்மே னிபொடிச்செய்திடாப்
பின்போகுவனென் றிவைபேசலுமே.