பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்171

சுனனும், அவ் அவ்எலாம்-அந்த அந்த ஆயுதங்களையெல்லாம், மாற்றி-
(தான் விடும் அம்புகளால்) விலக்கி, சரம் மாரி வழங்கினன்-(அவர்கள்மீதும்)
பாணவருஷத்தைப் பொழிந்தான்;(எ-று.)

     அடுக்கிவந்தஅவ் என்பது - சுட்டடியாப்பிறந்த பலவின்பாற் பெயர்.
                                                       (245)

70.அவன்விட்டசரங் களறுத்தணிதேர்
கவனப்பரிபா குகலக்கமுறப்   
பவனத்துடனங் கிபரந்ததுபோல்
துவனித்தவர்வெம் படைதூவுதலும்.

                   இதுவும், மேற்கவியும் - ஒரு தொடர்.

     (இ-ள்.)அவர்-அசுரர்கள், அவன் விட்ட சரங்கள்-அருச்சுனன் எய்த
அம்புகளை,அறுத்து-(தாங்கள் விடும் ஆயுதங்களால்) துணித்துத்தள்ளி,
துவனித்து-ஆரவாரஞ்செய்து, அணி தேர் - (அவனது) அழகிய தேரும்,
கவனம் பரி-விரைந்த நடையையுடைய குதிரைகளும், பாகு - சாரதியும்,
கலக்கம் உற - கலங்கு தலையடையும்படி, பவனத்துடன் அங்கி பரந்தது
போல் - காற்றோடுநெருப்புப் பரவியதுபோல [மிகவும்அதிகமாக விரைவிற்
பரவும்படி],வெம் படை தூவுதலும்-கொடிய ஆயுதங்களை,(அவன்மேற்)
சொரிந்தவளவில், (எ-று.)-'படையைத்தொட்டான்'என மேற்கவியோடு
இயையும்.

     பாகு - யானைதேர் குதிரைகளைச்செலுத்துந் தொழில்;அது,
இங்குப் பாகனுக்குப் பண்பாகுபெயர்.  அங்கி=அக்நி.  துவனித்து-த்வநி
என்னும் வடமொழிப் பெயர்ச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம்.
                                                    (246)

71.கட்டார்முதுகார் முகவீரனுமுன்
கிட்டாவுலகோர் புகழ்கேழ்கிளர்சீர்
முட்டாமரைமேன் முனிவன்படையைத்
தொட்டானசுரே சர்தொலைந்துகவே.

     (இ-ள்.) கட்டுஆர்-கட்டு அமைந்த, முது கார்முகம்-பழமையான
காண்டீவத்தையுடைய, வீரன்உம் - அருச்சுனனும், முன் கிட்டா-
(அவர்களுக்கு) எதிரில் நெருங்கி, அசுர ஈசர் தொலைந்துஉக-அவ்வசுரத்
தலைவர்கள்அழிந்து விழும்படி, உலகோர் புகழ் -
எல்லாவுலகங்களிலுமுள்ளார் யாவருந் துதிக்கின்ற, கேழ் கிளர் - ஒளி
விளங்குகின்ற, சீர்-சிறப்பையுடைய, முள் தாமரை மேல் முனிவன்-
முள்ளையுடையதாமரைமலரின் மீது தோன்றிய பிரமதேவனது, படையை -
அஸ்திரத்தை, தொட்டான்-பிரயோகித்தான்;(எ-று.)

     முதுகார்முகம் -மிகப்பழையதாயிருந்தும் எந்தப்போரிலுந் துணிபடாத
வலிமை யுடையதென்றபடி.                                  (247)