பக்கம் எண் :

190பாரதம்ஆரணிய பருவம்

லாம். மடம்-அழகும், பேதைமை யென்னும் பெண்மைக்குணமும்
ஆகவுமாம்.                                        (278)

103.-அசுரமாதரின்புலம்பலால் அருச்சுனன் சினந்தீர்ந்து
இரக்கங்கொள்ளுதல்.

இவ்வாறவுணர்மடமாத ரிரங்கியேங்க
மைவாள்விழியின்வழியஞ்சன வாரிபாயத்
தெவ்வாறியபின்னருந்தீர்ந்தில தீர்ந்தவன்றே
கைவார்சிலையான்கடுங்கோபமுங்கண்சிவப்பும்.

     (இ - ள்.)தெவ் ஆறிய பின்னர்உம் - பகைவர்களாகிய அசுரர்கள்
ஒழிந்தபின்பும், தீர்ந்தில - நீங்காதவையாகிய, கை வார் சிலையானகடு
கோபம்உம் - கையில் நீண்ட வில்லையுடையஅருச்சுனனது
பெருங்கோபமும், கண்சிவப்புஉம் - (அதனாலாகிய)கண்ணின் செம்மையும்,-
இ ஆறு அவுணர் மடம் மாதர் இரங்கி ஏங்க - இவ்விதமாக இளைய
அசுரமகளிர் துக்கித்து அழவும், மை வாள் விழியின் வழி - (அவர்களது)
மையிட்ட வாளாயுதம் போன்ற கண்களின்வழியே, அஞ்சனம் வாரி -
மையைக் கரைத்துவருகின்ற கண்ணீர், பாய - பெருகவும், (கண்டதனால்),
அன்றே தீர்ந்த-அப்பொழுதே தணிந்தன;(எ - று.)

     இதனால்,அருச்சுனனுக்குத் தேவர்களின் வேண்டுகோளாற்
பகைவர்கள்பக்கல் உண்டாயிருந்த ஆறாக்கோபத்தையும்,இயல்பாயுள்ள
பேரருளுடைமையையும் வெளியிட்டார்.  விழிக்கு வாளுவமை - கூர்மையும்
ஆடவரை வருத்தலும் பற்றி.  தெவ்-பகைமையுணர்த்தும் உரிச்சொல்;
பகைவர்க்குப் பண்பாகுபெயர்.  விழியின் வழி  - கண்களினின்று
ஒழுகுகின்ற என்றுமாம்.                                  (279)

104.-தேரைநாகரூர்க்கு நடத்துக என்று அருச்சுனன்
கூறல்.

அன்னார்நகரத்தழகுந்தொல்லரணுநோக்கி
மின்னாரும்வேலன்விறன்மாதலிதன்னைமீண்டு
நன்னாகரூரிற்றடந்தேரைநடாத்துகென்னச்
சொன்னானவனுந்துனைதேர்நனிதூண்டுமெல்லை.

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ - ள்.)மின் ஆரும் வேலன் - ஒளிநிரம்பிய வேலாயுதத்தையுடைய
அருச்சுனன்,-அன்னார்நகரத்து அழகுஉம் - அவ்வசுரர்களது
தோயமாபுரத்தின் அழகையும், தொல் அரண்உம் - பழமையான (மதிலும்
கடலகழியுமாகிய) அரண்களையும்,நோக்கி - பார்த்து, (பின்பு), விறல்
மாதலி தன்னை- ஜயத்தையுடைய தேர்ப்பாகனைநோக்கி, நல் நாகர்
ஊரில்-நல்ல தேவர்களது நகரத்திலே, தட தேரை - பெரிய இரதத்தை,
மீண்டு நடாத்துக - திரும்பச் செலுத்துவாயாக, என்ன - என்று,
சொன்னான்-;அவன்உம் -