பொழுதும் இறவாமற்பிழைத்துள்ளவர்களுமாகிய, இருவோர்-இரண்டு பேர், உளர்-உண்டு;(எ - று.) 'கன்னங்கரிய'என்றது - மிகு கறுப்பின் குறிப்பாய் வழங்கி வருவதொரு சொல்விழுக்காடு. என்றும் உள்ளார் - (புகழினால்) எப்பொழுதும் நிலைபெற்றுள்ளவரென்றுமாம். (282) 107. | அம்மாதர்தந்தைதனைநோக்கியனந்தகாலஞ் செம்மால்வரையிற்றவஞ்செய்தனர் செய்தநாளில் மைம்மான்விழியார்தமக்கந்த வனசவாணன் எம்மாலிசைத்தற்கிசையாத வரங்களீந்தான். |
(இ - ள்.) அமாதர் - அப்பெண்களிருவரும், தந்தைதனைநோக்கி - (படைத்தற்கடவுளாதலால் யாவர்க்கும்) பிதாவாகிய பிரமதேவனைக்குறித்து, அனந்த காலம் - அளவிறந்த காலம், செம் மால் வரையில்-சிவந்த பெரிய மேருமலையிலேயிருந்து, தவம் செய்தனர் - தவத்தைப் பண்ணினார்கள்: செய்த நாளில் - (அங்ஙனம்) பண்ணிய காலத்தில், மை மான் விழியார் தமக்கு-அஞ்சனமிட்ட மான் பார்வையொத்த கண்களையுடைய அம்மகளிர்க்கு, அந்த வனசம் வாணன் - தாமரை மலரில் வாழ்கின்ற அப்பிரமன், (பிரசன்னனாகி),எம்மால் இசைத்தற்கு இசையாத வரங்கள் ஈந்தான் - என்போலியராற் சொல்லுதற்கு முடியாத பலவரங்களைத்தந்தான்: (எ-று.) செம்பொன்வரையென்பார், 'செம்மால்வரை'என்றார். மான் - அதன் பார்வைக்கு முதலாகுபெயர். வநஜம் - நீரிற் பிறப்பது;வநம் - நீர். (283) 108. | தம்மக்களாயவசுரேச ரதிதிதந்த அம்மக்கடம்மாலழியாமையு மாடகத்தான் மும்மைப்புரம்போல்விசும்பூர்தரு மொய்ம்பினிந்தச் செம்மைப்புரமுங்கொடுத்தானத் திசைமுகத்தோன். |
(இ - ள்.) தம் மக்கள் ஆய - தம்மிருவரது புத்திரர்களாகிய, அசுர ஈசர் - அசுரத்தலைவர்கள்,அதிதி தந்த அ மக்கள் தம்மால் - அதிதி யென்னும் காசியபர்மனைவிபெற்ற புத்திரர்களாகிய அத்தேவர்களால், அழியாமைஉம் - அழிவடையாதிருத்தலாகிய வரத்தையும், ஆடகத்தால் - பொன்னாலாகிய,மும்மை புரம் போல் விசும்பு ஊர்தரு மொய்ம்பின் - திரிபுரம்போல ஆகாயத்திலே பறந்து செல்லும் வலிமையையுடைய, இந்த செம்மை புரம் உம் - அழகுள்ள இந்த இரணிய நகரத்தையும், அத்திசை முகத்தோன் - நான்கு முகங்களையுடைய அப்பிரமன், கொடுத்தான் - (அப்பெண்களுக்குத்) தந்தான்;(எ - று.) அதிதியின்மக்களாதலால், தேவர்களுக்கு 'ஆதித்தியர்'என்றும், 'ஆதிதேயர்'என்றும் பெயர்கள் உண்டு. அம் மக்கள்-அழகிய மக்கள் என்றுமாம். (284) |