பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்197

     (இ-ள்.) அந்தஓதை எதிர் - அவ்வோசையுண்டான இடத்துக்கு
எதிர்நோக்கி, ஓடுவார்உம் - ஓடுபவர்களும், உடன்று - பகைத்து, உறுக்கி -
கோபித்து, நாடுவார்உம் - (அவ்வோசையுண்டாதற்குக்காரணத்தை)
ஆராய்பவர்களும், நமர்கள் ஆண்மை நன்று நன்று எனா- நம்மவர்களது
பராக்கிரமம் மிகநன்றாயிருந்ததுஎன்று, நகைத்து ஆடுவார்உம் - (தம்மில்)
சிரித்துப் பேசுபவர்களும், அமரர் வாழ்வு பாழ்படுத்தும் - தேவர்களது
வாழ்க்கையைப் பாழாக்கிவருகிற, ஆயுதம் - ஆயுதங்களை,தேடுவார்உம் -
தேடி யெடுப்பவர்களும், எண் இறந்த தேர்கள் ஏறுவார்உம் - அளவில்லாத
தேர்களில் ஏறுபவர்களுமாய்,-(எ-று.)-'உந்திமுந்தினார்'என,
மேலிற்கவியில் முடியும்.

     ஆய் என்னும்வினையெச்சம்,வருவிக்கப்பட்டது.  நம்மவர்
பராக்கிரமம் பிறர் அஞ்சாது வந்து எதிர்க்கும்படியாயிற்றேயென்று, இகழ்ச்சி
தோன்ற 'நன்றுநன்று'என்றார்;பிறகுறிப்பு.  ஆடுதல் - வார்த்தையாடுதல்.
'உறுக்கிமேல்'என்று பிரதிபேதம்.    

117.கூளிகோடியுய்ப்பகுஞ்ச ரங்கள்கோடியுய்ப்பபேர்
ஆளிகோடியுய்ப்பவாயு கதிகொடந்தரத்தின்மேல்
வாளிபோதும்வாசிகோடி கோடியுய்ப்பவாவுதேர்
ஓளியாகவானினெல்லைமறையவுந்திமுந்தினார்.

     (இ-ள்.) கூளிகோடி உய்ப்ப - பலபெருங்கழுகுகள் இழுத்துப் பறந்து
செல்வனவும், குஞ்சரங்கள் கோடி உய்ப்ப - பலயானைகள்இழுத்துச்
செல்வனவும், பேர் ஆளி கோடி உய்ப்ப - பெரிய சிங்கங்கள் பல
இழுப்பனவும், வாயு கதி கொடு - காற்றுச்செல்லும் வேகத்தைப் பெற்று,
அந்தரத்தின்மேல் - ஆகாயத்திலே, வாளி போதும் - அம்புபோல நேர்
செல்லுகின்ற, வாசி கோடி கோடி - மிகப் பலவாகிய குதிரைகள், உய்ப்ப -
இழுப்பனவுமாகிய, வாவு தேர் - தாவிச் செல்லுகின்ற தேர்களை,ஓளி ஆக
- ஒழுங்காக, வானின் எல்லைமறைய - ஆகாயத்தின் எல்லைமறையும்படி,
உந்தி-செலுத்தி, முந்தினார்- முற்பட்டு வந்தார்கள்;(எ-று.)

     அந்த அசுரர்களின் தேர்கள் கூளி முதலியவைகளால் ஈர்க்கப்பட்டுச்
சென்றன என்க.  கூளி பூதமுமாம்.  குஞ்சரம் - மத்தகங்களுக்குக்
கீழிருக்கின்ற குழிகளுள்ள தென்றும், காட்டுப் புதர்களிற் சஞ்சரிப்பதென்றும்
காரணப்பொருள்படும்.  வாளி போதல்-வட்டமா யோடுதலுமாம்.  வாசி -
வாஜி; வடசொல்.  ஆயதேர் என்று பிரதிபேதம்.                (293)

118.-அவ்வசுரர்கள்மனத்தில் அருச்சுனனைபற்றி
நிகழும் எண்ணம்.

அந்தகன்பொரற்குநம்மை வல்லனல்லனபயமுன்
தந்தவிந்திரன்றனக்கு மொக்குமன்னதன்மைதான்
கந்தனென்னிலாறிரண்டு கண்கள்கைகளில்லைமேல்
எந்தவீரனம்மொடின்றெ திர்க்குமிந்தவீரனே.