(இ-ள்.)தவரினுக்கு - வில்வித்தையில், இராகவன் கொல் என - ஸ்ரீராமபிரானோஎன்று சொல்லும்படி, வரும் - அவதரித்த, தனஞ்சயன் - அருச்சுனன்,-அவர்விடுத்த - அவ்வசுரர்கள் (தன்மேல்) எறிந்த, படைகள் யாஉம் - ஆயுதங்களனைத்தும்,அழிய - அழியும்படி, வானிடை - ஆகாயத்திலே, கணை- அம்புகளை,கவர் தொடுத்து - ஒன்று பலவாம்படி விடுத்து, விலகி - (அவர்களின் ஆயுதங்களுக்குத் தான் இலக்காகாமல்) நீங்கி, மீள - பின்பு, அவர்கள் காயம் எங்கண்உம்-அவர்களுடம்பு முழுவதிலும், துவர் நிறத்த குருதி - சிவந்த நிறத்தையுடைய இரத்தம், சோர்தர-வழியும்படி, சரம் துரத்தினான்-அம்புகளைஎய்தான்;(எ-று.) கவர்தொடுத்தலாவது - ஒன்றிலிருந்து பலதோன்ற விடுதல். துவர் நிறத்த - பவழம்போன்ற நிறத்தையுடைய என்றுமாம். கணைக்கவர்- இரட்டையம்பு என்று உரைப்பாருமுளர். தவர் - வில். இராகவன் - ரகுமகாராசனது குலத்தில் அவதரித்தவனென்று பொருள். (302) 127.-அருச்சுனனம்புபடவேஅவுணர் ஆகாயத்தி லெழுந்து பூமி நீர்இவற்றில் தம் பட்டணத்தோடு மறைந்துமாயைபுரிதல். பார்த்தனெய்தவாளிமெய் படப்படப்பதைத்துமீது ஆர்த்தெழுந்துநகரினோடுமந்தரத்தினெல்லைபோய் வார்த்தரங்கவேலையூடுமண்ணினூடுமறையவத் தூர்த்தர்செய்தவஞ்சமாயை சொல்லலாகுமளவதோ. |
(இ-ள்.)பார்த்தன் எய்த வாளி - அருச்சுனன் எய்த அம்புகள், மெய் பட பட - (தம்) உடம்பில் மிகுதியாகப் படுவதனால்,அ தூர்த்தர் - வஞ்சகர்களாகிய அவ்வசுரர்கள், பதைத்து - வருந்தி, ஆர்த்து ஆரவாரித்து, மீது எழுந்து - மேலே கிளம்பி, நகரினோடுஉம்- (தங்கள்) பட்டணத்துடனே, அந்தரத்தின் எல்லைபோய் - ஆகாயத்தினிடத்தே சென்று, வார் தரங்கம் வேலையூடுஉம் - நீரலைகளையுடைய கடலினிடத்தும், மண்ணினூடுஉம் - பூமியிலும், மறைய - மறைவாக (நின்று), செய்த-,வஞ்சம் மாயை-வஞ்சனையுள்ளமாயையானது, சொல்லல் ஆகும் அளவதுஓ - சொல்லுதற்குக்கூடிய அளவையுடையதோ? [அன்றென்றபடி]. பார்த்தன் -பிரதையின் மகன் என்றுபொருள்: பிரதை - குந்தி;இது - அருச்சுனனுக்குக் காரணக்குறி. (303) 128.-அவுணரின்இந்திரஜாலம். அண்ணறேரின்முன்னதாகு மளவிறந்ததேரொடும் விண்ணின்மீதுதிசையளக்கும் வெற்பின்மீதுபொலியுமெக் கண்ணுமாகுமக்கணத்தின் மீளவுங்கரந்திடும் எண்ணலாவதன்றதன் றியற்றுமிந்த்ரசாலமே. |
|