பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்203

     (இ-ள்.) (அவ்வசுரர்களோடு கூடிய இரணியபுரமானது),-அண்ணல்
தேரின் முன்னது ஆகும் - (ஒருகால்) அருச்சுனனது தேருக்கு எதிரில்
உள்ளதாய்க் காணப்படும்;(உடனே), அளவு இறந்த தேரொடுஉம் -
கணக்கில்லாத தேர்களுடனே, விண்ணின் மீது - ஆகாயத்திலே, திசை
அளக்கும் - (முழுவதும் பரவி) எல்லாத்திக்குக்களையும்அளவிடும்;
வெற்பின்மீது பொலியும் - (மற்றொருகால்)ஒருமலையின்மேலேவிளங்கும்;
எ கண்உம் ஆகும் - (வேறொருகால்)எவ்விடத்துங் காணப்படும்;அ
கணத்தில் - அந்த க்ஷணத்தில்தானே, மீளஉம் கரந்திடும்-திரும்பவும்
மறைந்து விடும்;அது அன்று இயற்றும் - அன்றைத்தினத்தில்
அவ்விரணியபுரம் செய்த, இந்த்ர சாலம் - மகாமாயையானது, எண்ணல்
ஆவது அன்று - நினைப்பதற்குங்கூடியதன்மையுடையதன்று;

     எண்ணலாவதன்றுஎன்றதனால்,சொல்லலாவதுஞ் செய்யலாவது
மன்றென்பது தானே பெறப்படும்.  இந்திரசாலமாவது - உள்ளதை
இல்லாததாகவும் இல்லாததை உள்ளதாகவும்ஒன்றை மற்றொன்றாகவும்
அற்புதங் காட்டுவதொரு மாயவித்தை: ஆன்மாவை
மயங்கச்செய்வதென்பது, இத்தொடர்க்குப் பொருள்.  அது -
அப்புரத்திலுள்ளார்க்கு, இடவாகுபெயர்.                   (304)

129.-தன்ஒற்றைவில்லைக்கொண்டுஅருச்சுனன்
எங்குஞ் சரமாரிபொழிதல்.

அந்தவஞ்சர்புரியுமாயை வகையறிந்தருச்சுனன்
சிந்தைகன்றிவிழிசிவந்து தெய்வவாகைவில்லையும்
மைந்துடன்குனித்துவாளி வாயுவேகமுடன்விடுத்து
எந்தவெந்தவுலகுமப்பு மாரியாவியற்றினான்.

     (இ-ள்.) அந்தவஞ்சர் புரியும் - வஞ்சனையையுடையஅவ்வசுரர்கள்
செய்கின்ற, மாயை வகை - மாயையின் விதத்தை, அறிந்து-,அருச்சுனன்-,
சிந்தை கன்றி - மனங் கொதித்து, விழி சிவந்து - கண்கள் செம்மை
நிறமடைந்து, தெய்வம் வாகை வில்லைஉம்- தெய்வத்தன்மையையும்
வெற்றிமாலையையுமுடையகாண்டீவத்தையும், மைந்துடன் குனித்து -
பலத்தோடு வளைத்து,வாளி - அம்புகளை,வாயு வேகமுடன் - காற்றை
யொத்த வேகத்துடனே, விடுத்து - தொடுத்து, எந்த எந்த உலகுஉம்-
(அந்நகரஞ் செல்லுகின்ற) எல்லா இடங்களையும்,அப்பு மாரி ஆ
இயற்றினான்- பாணவர்ஷமயமாகச் செய்தான்;(எ-று.)

     அப்பு மாரி -அம்புகளின் மழை;வேற்றுமையில் மென்றொடர்
வன்றொடராயிற்று. மாரியால் என்றும் பாடம்.                 (305)

          130.-அருச்சுனன்திறனைஅவுணர்மதித்துக் கூறல்.

தனிதமேகமன்னதேரு மொன்றுதாவில்குன்றுபோல்
குனிதருங்கடுப்பின்மிக்க கொடியவில்லுமொன்றுமேல்
கனிவுறுஞ்சரக்குழாம் விசும்பினெல்லைகாட்டுமோர்
மனிதன்வின்மைநன்றுநன் றெனாமதித்துவஞ்சரே.