இதுவும், மேற்கவியும்- குளகம். (இ-ள்.)மாருதம் - காற்றானது,விசையுடன்-வேகத்துடனே, வட அனல் கொளுவி - வடவாமுகாக்கினியைத் துணையாகக்கொண்டு, கார் தொறுஉம் - மேகங்களிலெல்லாம், நிரை நிரை - வரிசை வரிசையாக, கடிகுவது அதுபோல் - அழிவையுண்டாக்குகிற அத்தன்மைபோல, தேர்தொறுஉம் அமர் புரி அவுணர்கள் தேகத்து - தேர்களிலெல்லாமிருந்து போர்செய்கின்ற அசுரர்களது உடம்புதோறும், ஓர் ஒரு கணை-ஒவ்வொரு அம்பு, ஒரு நொடியினில்-ஒரு நொடிப்பொழுதிலே, உற-(அந்த அஸ்திரத்தினதுதிவ்விய சக்தியால்) பொருந்த,-(எ-று.)-சிதறி,பொதுள, கஞலின என்க. படபாநலம்என்னும் வடமொழி, தமிழில் 'வடவனல்'எனச் சிதைந்து வழங்கிற்று;அது, கடலினிடையே பெண்குதிரையொன்றின் முகத்திலுள்ளதும், மழை முதலியவற்றால்வருகிறநீரினாற்கடல் பொங்காதபடி அந்நீரை உறிஞ்சுவதும், யுகாந்தகாலத்தில் அங்கு நின்று எழுந்து உலகங்களை யொழிப்பதுமாகிய தீ;படபா-பெண்குதிரை, அநலம் - நெருப்பு. வடவனல் என்பதற்கு - வடக்கிலுள்ள அக்கினி யென்று உரைப்பாருமுளர். மிக விரைவிலழித்தற்கு, காற்று நெருப்போடு சேர்தலைஉவமை கூறினார். கொளுவுதல்-கூட்டிக்கொள்ளுதல். கடிகுவது, கு-சாரியை. (315) 140. | மகபதியரிசிறை வரைநிகரெனவே திகைதொறுமவுணர்கள் சிரநனிசிதறிப் புகையொடுதெறுகன லகல்வெளிபொதுளக் ககபடலமுமுறை கஞலினகளமே. |
(இ-ள்.)(அவ்வம்புகளினால்),மகபதி அரி சிறை வரை நிகர் என- இந்திரனால்அறுக்கப்பட்ட இறகுகளையுடையமலைகள்ஒப்பென்னும்படி, திகைதொறுஉம் - எல்லாத்திக்குக்களிலும், அவுணர்கள் சிரம் - அசுரர்களது தலைகள்,நனி சிதறி-மிகவுஞ் சிந்தி, தெறு கனல் - (அகப்பட்டவற்றை) அழிக்கின்ற நெருப்பு, புகையொடு - புகையுடனே, அகல் வெளி - பரந்த ஆகாயவெளியிலே, பொதுள - நிறையாநிற்க,-ககபடலம்உம் - (கழுகுமுதலிய புலாலுண்ணும்) பறவைகளின் கூட்டமும், களம் - போர்க்களத்தில், முறை-ஒன்றன்பின் ஒன்றாக,கஞலின-நெருங்கின;(எ-று.) க கம்என்பதற்கு - ஆகாயத்திற் செல்லுவதென்று பொருள்;கம்- ஆகாசம். ககபடலம் - பலவினீட்டத்தற்கிழமைப்பொருளில் வந்த ஆறாம் வேற்றுமைத்தொகை;வடமொழித்தொடர். (316) 141.-படுகளச்சிறப்பு. ஆடினவறுகுறை யலகைகளுடனின்று ஓடினதிசைதொறு முகுகுருதியினீர் நீடினபிணமலைநிரைநிரைநெறிபோய்த் தேடினகதிர்களு மிசைவழிசெலவே. |
|