மிருந்த அன்புமிகுதிவிளங்கும். புதுமை - பண்பாகுபெயர். களியுவகை - ஒருபொருட்பன்மொழி. (345) 9. | அங்குள்ளதபோதனர்தம்பாதம்போற்றியவருரைக்குமாசியும் பெற்றப்பாலேகி, எங்குள்ளகடவுணெடும்புனலும்யாறு மெப்புனலுந் தப்பாமலினிதினாடி, வங்கமெறிகடல்கடைந்துவானோர்க்கெல்லாமரு ந்துவிருந்தருளியமந்தரமுங்காட்டிக், கங்கைநதிகுதிபாயுஞ்சிகரச்சா ரற் காந்தர்ப்பமெனும் வரையுங்காட்டினானே. |
(இ-ள்.)அங்குஉள்ள - அந்த இந்திரகீலமலையிலிருக்கின்ற, தபோதனர்தம் - முனிவர்களுடைய, பாதம் - பாதங்களை,போற்றி - துதித்து, அவர் உரைக்கும் - அம்முனிவர் அருள் கொண்டு கூறும், ஆசிஉம் - வாழ்த்துக்களையும்,பெற்று-,அப்பால் ஏகி-அப்புறம் போய், எங்கு உள்ள-சென்ற பலவிடங்களிலுமுள்ள, கடவுள் நெடும் புனல்உம்- தெய்வீகம் பொருந்திய சிறப்புப் பெற்ற அருவித்தீர்த்தங்களிலும், யாறுஉம்- நதிகளிலும், எப்புனல்உம் - (மடுமுதலாகவுள்ள) எல்லாத்தீர்த்தங்களிலும், தப்பாமல்-ஒன்றுவிடாமல், (பாண்டவர்), இனிதின் ஆடி - இனிது ஸ்நானஞ் செய்து நிற்க,-(உரோமசமுனிவன்), வங்கம் எறி கடல் கடைந்துவானோர்க்குஎல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரம்உம் காட்டி - அலைவீசுகிறகடலைக்கடைந்து தேவர்கள் யாவர்க்கும் அமிருதத்தை விருந்துணவாகத்தந்த மந்தரமாலையைக்காட்டி, (பிறகு அருச்சுனன் சுவர்க்கலோகத்திருந்துஇறங்கப்போகின்ற), கங்கை நதி குதி பாயும் சிகரம் சாரல் காந்தர்ப்பம் எனும் வரைஉம்-கங்காநதி குதித்துப் பாயப்பெற்ற சிகரத்தையும் தாழ்வரையையுங்கொண்ட காந்தர்ப்பமென்கிற மலையையும்,காட்டினான்-;(எ-று.) மேலேமந்தரமுங்காட்டி வரையுங்காட்டினானென்றுவருவதனால், இந்தப் பாண்டவர்கள் நீராடியதும் 'இதுஇந்தத் தீர்த்தம், இது இந்தத் தீர்த்தம்'என்று அந்தக் கடவுள் முனிவன் காட்டக்கண்ட தீர்த்தங்களிலேயே யென்பது பெறப்படும். காட்டினவன் உரோமசனே யென்பது மேற்கவியால் விளங்கும். ஆடி=ஆட;பிறகருத்தாவின் வினையைக்கொண்டு முடிதற்கு உரிய செயவென்னும் வாய்பாட்டு வினையெச்சமாகத்திரிக்க. கந்தமாதன வரையும் என்று பாடமிருப்பின் நலம். (346) 10. | அந்தவுயர்கிரியினெடுஞ்சாரறோறுமருந்தவஞ்செய்முனி வரரையடைவேகாட்டி, இந்தவனந்தனக்கெமையாளுடையான் குன்ற மீரைம்பதி யோசனையென்றெடுத்துக்காட்டிக், கந்தனெனவெக் கலையும்வல்லஞானக் கடவுண்முனிவிசாலயனாலயமுங்காட்டி, உந்து நெறிச்சொங்கோலாயிதனிலோராண் டிருத்தியெனவுரோமசனுமுரை த்திட்டானே. |
(இ-ள்.) அந்தஉயர் கிரியின்-அந்த ஓங்கிய காந்தர்ப்பமலையின், நெடுஞ் சாரல் தோறுஉம்-நீண்ட தாழ்வரைதோறும், அருந்தவஞ் செய் - அருமையான தவத்தைச் செய்கின்ற, முனிவரரை- |