இருடிச் சிரேட்டரை,அடைவுஏ காட்டி - முறையே இன்னாரின்னாரென்று தெரிவித்து, இந்த வனம் தனக்கு - இந்தத் தபோவனத்துக்கு, எமை ஆள்உடையவன் குன்றம்-எம்மையடிமையாகவுடைய சிவபெருமானுடைய கைலாசமலை,ஈர் ஐம்பது யோசனைஎன்று எடுத்துக் காட்டி - நூறுயோசனைதூரத்தி லுள்ளதாகும் என்று எடுத்துச் சொல்லி,-கந்தன்என கலைஉம்வல்ல ஞானம் கடவுள் முனி - முருகக்கடவுளென்று சொல்லும்படி எல்லா வித்தைகளிலும் வல்லவனானபேரறிவுபடைத்த தெய்வவிருடியாகிய, விசாலயன் - விசாலயனென்ற முனிவனின், ஆலயம்உம் - இருப்பிடத்தையும், காட்டி-,உரோமசன்உம்-,நெறி உந்து - நன்னெறியிற் செலுத்துகின்ற, செங்கோலாய் - செங்கோலையுடயவனே! இதனில் - இந்தக் காந்தர்ப்பமலையிலே,ஓர் ஆண்டு இருத்தி என-ஒரு வருஷகாலம் தங்கியிருப்பாயென்று, உரைத்திட்டான்-சொன்னான்;(எ-று.) (347) 11.-பாண்டவர்காந்தர்ப்பகிரியின் வனத்திலிருக்கையில் பொன்மலரொன்றுவீழ்ந்ததைக் கையிற்கொண்டு திரௌபதிசிந்தித்தல். அம்முனிவன்மொழிப்படியேவரம்பில்கேள்வி யறன்மகனுந்தம்பியருமரிவையோடும், எம்முகமுந்தம்முகமாவிலையுங்காயுமினியகனி யுடன ருந்தியிருக்குநாளில், மைம்முகில்வாகனன்கனகமுடிமேலம் பொன் வனசமல ரொன்றுதழன்மயின்முன்வீழச், செம்மலரைச்செங் கண்மலர்தன்னானோக்கிச் செய்யமலர்க்கரத்தேந்திச்சிந்தித்தாளே. |
(இ-ள்.) அமுனிவன் மொழி படியே - அந்த உரோமசமுனிவனது வார்த்தையின்படியே, வரம்பு இல் கேள்வி அறன்மகன்உம் - அளவில்லாத நூற்கேள்விகளையுடையதருமபுத்திரனும், தம்பியர்உம் - வீமன் முதலியோரும், அரிவையயோடுஉம் - திரௌபதியுடனே, எ முகம்உம் - அக்காட்டினிடம் முழுவதும், தம் முகம் ஆ - தமது சொந்தவிடத்தை யொத்துத் தம் வயத்திலிருக்க, இலைஉம்காய்உம் இனிய கனியுடன் அருந்தி - இலைகளையும்காய்களையும்சுவையினிய பழங்களையும்உண்டு, இருக்கும் நாளில்-(அவ்வனத்தில்) வாழ்ந்திருக்கும் நாட்களிலொருநாள்,-மை முகில் வாகனன் கனகம் முடிமேல் - கருநிறமுடைய மேகத்தை வாகனமாகவுடைய இந்திரனது பொன்னாலாகியகிரீடத்தையணிந்த சிரசின் மேலிருத்தற்கு உரிய, அம்பொன் வனசம் மலர் ஒன்று - அழகிய பொன்மயமானதொரு தாமரைப்பூ, தழல் மயில் முன் - நெருப்பினின்றவதரித்த மயில்போலுஞ் சாயலையுடையதிரௌபதியினெதிரில், வீழ - வீழ்ந்திட,-(அவள்)செம் மலரை - சிவந்த அந்தப் பூவை, செம் கண் மலர்தன்னால்-(தனது)செந்தாமரைமலர்போன்ற கண்களினால்,நோக்கி - பார்த்து, செய்ய மலர் கரத்து ஏந்தி - சிவந்த தாமரைமலர்போன்ற (தன்) கையிலே யெடுத்துக்கொண்டு, சிந்தித்தாள் - (அதைக் குறித்து வியப்புடன் பின்வருமாறு) என்ணுபவளானாள்;(எ-று.) |