யும், வேருடன்-,நேர் ஆக்கி-அழித்து,-விலங்கினொடு-மிருகங்களினுடனே, புள் இனம்உம்-பறவைக் கூட்டங்களும், உடைய-அழியும்படி, தாக்கி-மோதி, மெய் நடுங்கி உள்ளம் வெம்பி தடுமாறி கலங்கி விழ கனம் அதிர்வ போல ஆர்த்து-உடல்நடுங்கி உள்ளம் கரிந்து தடுமாற்றமடைந்து கலங்கி விழும்படி மேகம் இடிப்பது போலப் பேராரவாரஞ்செய்துகொண்டு, காஞ்சனம் பேர் எழில் வனம்உம் - காஞ்சனமென்று பேரையுடைய பெரிய அழகிய வனத்தையும், கடந்திட்டான்-;(எ-று.) இந்தவீமசேனன் செல்லும் விசையினால்,நிலங்குலுங்குதல் முதலியன நிகழலாயின என்க. அடையத் தாக்கி என்று பிரதிபேதம். (354) 18.-வீமசேனன்கதலிவனத்தைக் காணுதல். அவ்வனத்தையிகந்தனந்தகாதமேகி யங்கிடைவிட்டுத்தரத் தினப்பாலேகி, மெய்வனப்புமடல்வலியுமிகுத்தவாகை வீமனெனும் பேர்திசையின் விளக்கும்வீரன், மைவனப்பினுடன்படியுஞ்சினைக்கைவாச மலர்ப்பொழிலினொருமருங்கேமத்தமாவின், கைவனப்புந்தழைசெவியுமருப்புஞ்சேரக்கவினளிக் குங்குலைக்கதலிக்காடுகண்டான். |
(இ-ள்.) மெய்வனப்புஉம் - உடலழகும், அடல் வலிஉம்-(பகைவரை) அழிக்க வல்ல உடல் வலிமையும், மிகுத்த-மிக்குள்ள, வாகை- வெற்றியையுடைய, வீமன் எனும் பேர் திசையின் விளக்கும்வீரன் - வீமனென்கிற (தன்) பெயரைத் திக்குகளில் விளங்கச் செய்பவனாகியஅந்த வீரன்,-அவனத்தை இகந்து - அந்தக் காஞ்சன வனத்தைவிட்டு, அனந்தம் காதம் ஏகி - பல காததூரஞ்சென்று, அங்கு இடைவிட்டு- அவ்விடத்தைவிட்டு, உத்தரத்தின்-வடதிசையாக, அப்பால் ஏகி- அப்புறஞ்சென்று,-மை-மேகம்,வனப்பினுடன்-அழகிய நிறத்தோடு, படியும்- தங்கப்பெற்ற, சினை-கிளைகளின்,கை-பக்கங்களிலே, வாசம் மலர் - நறுமணமுள்ள மலர்களைக்கொண்ட,பொழிலின் - சோலையின், ஒருமருங்கே - ஒருபக்கத்திலே, மத்தம்மாவின்- மதம் பிடிக்குந் தன்மையுள்ள யானையின்,கை வனப்புஉம்-கையினழகும், தழை செவிஉம் - தழைந்த காதுகளும், மருப்புஉம்-தந்தங்களும், சேர-சேர்தலால், கவின் - அழகை, அளிக்கும் - தருகின்ற, குலைகதலி காடு - குலைபொருந்திய கதலீவனத்தை, கண்டான்-;(எ-று.) பின்னிரண்டடிகள் - கதலீவனத்தின் தன்மையைக் கூறுவன. கதலீவனமென்பதனை,கதலிக்காடு என்றார். தூரத்திலிருந்து காணும்போது தழைந்தஇலைகள்யானைக்காதுகளையும்,அடித்தண்டு நிலம்படியும் யானைக்கைகளையும்,குலைகள்யானைமருப்புக்களையும் போலுதலால், கதலிவனம் 'மத்தமாவின்கைவனப்பும்தழைசெவியும் மருப்புஞ்சேரக் கவினளிக்குங் குலைக்கதலிக்காடு'எனப்பட்டது. பலபொழில்கள்சுற்றியிருக்க அவற்றினிடையே இந்தக் கதலிக்காடு இருப்பதுஎன்பதனை,'பொழிலினொரு மருங்கே கதலிக்காடு'என்பது, விளக்கும். (355) |