பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்243

     கிரிக்குக்குகை, இயற்கையடைமொழி, 'நகைத்துநாகமு நடுங்கிட
நடந்தனனடந்து'என்று பிரதிபேதம்.                           (361)

25.-அனுமான்வீமனைக்கண்டு'நீயார் அடா?'என்று
வினவுதல்.

அண்டர்தானவரரக்கரு மணுகுறாவனத்தில்
எண்டிசாமுகமெங்கணு மிரிந்திவார்த்து
மண்டிமேல்வருமானுட னாரடாவென்றான்
சண்டவாயுவின்றனயனைமற்றவன்றமையான்.

     (இ-ள்)சண்டம் வாயுவின் தனயனை- உக்கிரமான வாயுவினது
குமாரனானவீமனைநோக்கி, அவன் தமையன் - (வரும்வழியிலிருந்த)
அவனது முன்னவனானஅனுமான், 'அண்டர்தானவர் அரக்கர்உம்
அணுகுறாவனத்தில்-தேவர் அசுரர் இராக்கதர் என்னும் இவர்களும்
கிட்டவரவொண்ணாதஇக்கதலிவனத்திலே, எண் திசாமுகம் எங்கண்உம்
இரிந்திட ஆர்த்து - எட்டுத்திக்குகளினிட முழுவதும் அஞ்சியோடும்படி
ஆரவாரித்து, மண்டி மேல் வரும் - நெருங்கி எதிரில் வருகிற, மானுடன்
மனிதனே! (நீ), ஆர் அடா - யாரடா?' என்றான்என்று வினவினான்:  
(எ-று)-மற்று-அசை.

     இங்ஙனம்அனுமான் தோன்றினது, வீமசேனன் வழியிடையில்
யாதோரிடையூறுமின்றி இனிது காரியம் முடித்துச் செல்ல வேணுமென்னும்
விருப்பத்தினாலேயேயென்பது, முதனூலில் விளங்கும்.  அண்டர்-
அண்டகோளத்தின் மேலிடத்திலுள்ளவர்.  எண்டிசாமுகம்-நான்கு
பெருந்திசையும் நான்கு கோணத்திசையும்.  தமையன்-தம்ஐயன்
எனப்பிரித்துத் தமது தலைவனெனக்கொண்டுகாரணப் பெயராக்குக.  (362)

26.-வீமன்'நீயார்?'என்று அவ்வனுமானைமாறு
வினாவுதல்.

தம்முனாகியவானரஞ்சாற்றியவுரைகேட்டு
எம்முனாகிவந்திருந்தநீயார்கொலென்றிசைத்தான்
தெம்முனாயினுஞ்செவ்விமென்தேகமாமகளிர்
தம்முனாயினுநாத்தவறாவடல்வீமன்.

     (இ-ள்) தெம்முன் ஆயின்உம் - பகைவரின் முன்பானாலும்,செவ்வி
மெல் தேகம் மா மகளிர்தம் முன் ஆயின்உம்-அழகிய மென்மையான
சரீரத்தையுடைய சிறந்த பெண்களது முன்பானாலும்,நா தவறா-நாக்கினாற்
சொல்லும்வாய்மை தவறுதலில்லாத, அடல் வீமன்-வலிமையுடைய
வீமசேனன்,-தம்முன்ஆகியவானரம் சாற்றிய உரை கேட்டு-தனக்குத்
தமையனானஅனுமான் சொன்ன வார்த்தையைச் செவியுற்று, எம் முன்
ஆகி வந்து இருந்த நீ யார் கொல் என்று இசைத்தான்-எமக்கு எதிரிற்
பொருந்தி வந்திருந்த நீ யாவனோ? என்று அவனைஎதிர் வினவினான்;
(எ-று.)