பக்கம் எண் :

248பாரதம்ஆரணிய பருவம்

     இதனால்,முதலில் 'யார்கொல்நீ'என்ற அநுமான் வினாவிற்கு
விடையிறுத்தவாறு.  தாமம் - வெற்றிமாலையுமாம்.               (369)

33.-அனுமான்வீமனைநோக்கி'ஸ்ரீராமன்புகழை உனக்கு
யார் சொன்னவர்?'என்று வினவல்.

அன்னவாசகமவனுரைத் தலுமிகலனுமான்
கன்னபாகமுஞ்சிந்தையு முந்துறக்களித்து
மின்னுவார்சிலையிராகவன்மெய்ப்பெருஞ்சீர்த்தி
சொன்னவாறுநன்றுனக்கிதார் சொற்றவரென்றான்.

     (இ - ள்.)அன்ன வாசகம் - அவ்வார்த்தையை, அவன்-அந்த வீமன்,
உரைத்தலும் - சொன்னவுடனே,-இகல் அநுமான்-பராக்கிரமத்தையுடைய
அநுமான்,-கன்னபாகம்உம்-காதின் பகுதியும், சிந்தைஉம் - மனமும், முந்துற
- முற்பட, களித்து-மகிழ்ச்சியடைந்து,-மின்னு வார் சிலைஇராகவன் மெய்
பெருஞ் சீர்த்தி - மின்னுகின்ற நீண்ட விற்படையையுடைய
இராமபிரானுடைய உண்மையான பெரியமிக்க புகழை, சொன்ன ஆறு-(நீ)
சொல்லியவகை, நன்று-இனிது:உனக்கு-, இது-இந்தராகவன் பெருஞ்
சீர்த்தியை, ஆர் சொற்றவர்-சொன்னவர் யாவர்?என்றான்- என்று
வினாவினான்;(எ - று.)

     கன்னபாகம் =கர்ணபாகம்:வடசொற்றொடர். "சீர்த்திமிகுபுகழ்"
என்பது, தொல்காப்பியம்.                                  (370)

34.-பரத்துவாசன்சொல்லக் கேட்டுளேனென்று
வீமசேனன்விடையிறுத்தல்.

வரத்தினாலருமறையினால்வார்சிலைபயிற்றும்
பரத்துவாசன்முன்பகர்தரக் கேட்டனன்பலகால்
திரத்தினாலுயரிராகவன்சிலைவலியென்றான்
உரத்தினாலொருவீரருமொப்பிலாவுரவோன்.

     (இ - ள்.)உரத்தினால்- வலிமையிலே, ஒரு வீரரும்-, ஒப்புஇலா -
(தனக்கு) உவமையாகப் பெறாத,உரவோன் - வலிமையையுடையவனாகிய
வீமசேனன்,-'திரத்தினால்உயர் - உறுதிப்பாட்டினால்மேம்பட்ட, இராகவன்
- இராமபிரானுடைய, சிலைவலி - வில்லின் வல்லமையை, வரத்தினால்-
மேன்மையாக, அரு மறையினால்-அருமையானவேத மந்திரங்களோடு, வார்
சிலை- நீண்டவில்லை,பயிற்றும்-பழக்கிய, பரத்துவாசன் - துரோணன்,
முன் - முன்பு, பகர் தர - சொல்ல, பலகால் கேட்டனன்-பலமுறை
கேட்டுள்ளேன்',என்றான்- என்று கூறினான்;(எ-று.)

     பாண்டவர்க்குவில்வித்தை பயிற்றுவித்த ஆசிரியனாகியதுரோணன்
பரத்துவாசகுமார
னாதலால்அவன் 'வார்சிலைபயிற்றும் பரத்துவாசன்'
எனப்பட்டான்: ஆகவே, பரத்துவாசன், என்பது - பரத்வாஜன் என்பதன்
விகாரம்.  துரோணன் பரத்துவாச