பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்249

குமாரனென்பதை"பரதநாதவேதபரத்துவாசனென்பான், விரத வேள்விதன்னின்
மேனகையாலான, சுரததாது வீழ்ந்த துரோண கும்பந்தன்னில், வரதனொருவன்
வந்தான் வசிட்டமுனியோடொப்பான்" என்று ஆதிபருவத்தில் வந்தது
கொண்டும் அறியலாம்.                                        (371)

35.-இரண்டுகவிகள்-ஒருதொடர் : அநுமான் தன்னைத்
தெரிவித்தல்.

குந்திகான்முளைகூறியவாசகங்கேட்டுப்
புந்தியாலுயரஞ்சனைபுதல்வனும்புகல்வான்
சிந்துசீகரத்சிந்துமுன் கடந்துசெந்தீயால்
உந்துவாள்வலிநிருதரூ ரொருங்குசுட்டவனும்.

     (இ - ள்.)குந்தி கான்முளை- குந்தியின் குமாரனானஅந்தப்
பீமசேனன், கூறிய - சொன்ன, வாசகம் - வார்த்தையை, கேட்டு-, புந்தியால்
உயர் - அறிவினால்மேம்பட்ட, அஞ்சனைபுதல்வன்உம்-
அஞ்சனாதேவியின்புதல்வனானஅனுமானும், புகல்வான் - (பின் வருமாறு)
சொல்பவனானான்:-'சிந்துசீகரம் - (அலைகளின்மூலமாகத்) தெறிக்கின்ற
நீர்த்திவலைகளையுடைய,சிந்து - கடலை,முன் கடந்து-, செந் தீயால் -
(அரக்கர் தன் வாலிற் கொளுத்திய) செந்நிறத் தீயைக்கொண்டு,-உந்து-
மேலெறிகின்ற, வாள் வலி - வாட் படையின் வலிமையையுடைய, நிருதர் -
அரக்கருடைய, ஊர்-இலங்காபுரியை, ஒருங்கு - ஒருசேர, சுட்டவன்உம் -
எரியுமாறு செய்தவனும்,-(எ-று.)-'சிந்தைசெய்பவனும்'என்று மேலே
தொடரும்.

     கான்முளைஎன்பது - சந்ததி முளைப்பதற்குக்காரணமானது என்ற
காரணம்பற்றி, மகவைக் காட்டும்.  அநுமான் வீமன் என்ற இருவரும் வாயு
புத்திரராயினும், ஒருத்தர் குந்தியின் புதல்வரும், மற்றொருத்தர்
அஞ்சனையின்புதல்வரும் என்ற வேறுபாடு உடைமையால், அத்தன்மையை
இந்தச் செய்யுளில் விளக்கினார்.                            (372)

36.அந்தவார்சிலையிராமனுக்கடிமையாயென்றும்
சிந்தையாலவன்றிருப்பதஞ் சிந்தைசெய்பவனும்
உந்தையாகியவாயுவுக் குற்பவித்தவனும்
இந்தவாழ்வுடையனுமனே யென்றனனிகலோன்.

     (இ - ள்.)அந்த வார் சிலைஇராமனுக்கு அடிமை ஆய் - அவ்வாறு
(உன்னாற்புகழ்ந்து) கூறப்பட்ட நீண்ட வில்லையுடையஇராமனுக்கு
அடியவனாகி,என்றுஉம் - எப்பொழுதும், சிந்தையால் - மனத்தினால்,
அவன் திரு பதம் சிந்தை செய்பவன்உம் - அவனது திருவடிகளைத்
தியானஞ் செய்பவனும், உந்தை ஆகிய வாயுவுக்கு உற்பவித்தவன்உம் -
உனது தந்தையான வாயுதேவனுக்குப் பிறந்தவனும், இந்த வாழ்வு உடை
அனுமன்ஏ - இந்த வாழ்க்கையையுடைய அனுமானாகியநானே',என்றனன்
- என்று கூறினான்:(யாவனென்னில்),-இகலோன் - வலிமையையுடைய
ஆஞ்சனேயமூர்த்தி;