பக்கம் எண் :

254பாரதம்ஆரணிய பருவம்

நெருங்குவது,அரிது-முடியாது;(எ-று.)-ஆல்-ஈற்றசை: தேற்றமுமாம்.(380)

44.அறிவும்வாய்மையுந்தூய்மையு மன்புமின்னருளும்
பொறையுஞானமுங்கல்வியும் புரிபெருந்தவமும்
நெறியுமானமும்வீரமு நின்னவாதலினால்
பெறவுனக்கரிதாயதே தென்றனன்பெரியோன்.

     (இ-ள்.)அறிவுஉம் - புத்தியும், வாய்மைஉம் - சத்தியமும்,-
தூய்மைஉம்-மனச்சுத்தியும், அன்பும்-,இன் அருள்உம் - இனிய
கருணையும்,பொறைஉம்-பொறுமையும், ஞானம்உம்-கல்வியறிவும்,
கல்விஉம்-,புரி பெருந்தவம்உம் - செய்கின்ற மிக்கதவமும், நெறிஉம்-
நீதியும், மானம்உம்-ரோஷமும், வீரம்உம்-பராக்கிரமமும், நின்ன-
நின்னிடத்திலுள்ளன: ஆதலினால்-,உனக்கு பெற அரிது ஆயது ஏது-
உனக்குப்பெறுதற்கு அருமையாயிருப்பது எது?  என்றனன்-என்று
கூறினான்:(யாவனெனில்),-பெரியோன்- பெருந் தோற்றமுள்ளவனாகிய
அநுமான்;(எ-று.)-பெரியோன் மூத்தோனெனினுமாம்.

     இதனால்,அறிவு முதலியவற்றைப் பெற்றுள்ள உன்னால்அந்தமலர்
பெறுதற்கு எளிதேயென்று கூறியவாறு.  அறிவு என்பது-இயற்கையறிவையும்,
ஞானம் என்பது - கல்வி கேள்விகளினாலாகியசெயற்கையறிவையுங்
காட்டுமென்க.  நின்ன - பலவின்பால்முற்று.                    (381)

45.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: ஏற்றதுணை
இருத்தலால்யாவர்காத்தாலும் மலரைக் கவர்வே னென்று
வீமன் கூறுதல்.

முன்னவன்புகலுறுதிகூர் மொழியெலாங்கேட்டுப்
பின்னவன்றொழுதிவையிவைபேசினன்பின்னும்
மன்னர்மன்னவனறமுண்டு மறமுண்டுவழக்கே
உன்னினுன்னருளுண்டுதிண் டோளுரமுண்டால்.

     (இ-ள்.)முன்னவன் - தமையனாகியஅநுமான், புகல் - கூறிய, உறுதி
கூர்-நிச்சயம்மிக்க, மொழிஎலாம் - வார்த்தைஎல்லாவற்றையும், கேட்டு-,-
பின்னவன்-தம்பியாகிய வீமன், தொழுது - (அநுமானை)வணங்கி, இவை
இவை-இவ்விவ்வார்த்தைகளை,பின்னும் பேசினன்-மேலும் பேசலானான்:
மன்னர் மன்னவன் - அரசர்க்குட் சிறந்தவனானதருமபுத்திரனுடைய, அறம்
- தருமம், உண்டு - இருக்கிறது:மறம் உண்டு - ரோஷம் உள்ளது:
வழக்குஏ உன்னின்-முறைமையாக ஆலோசித்தால்,-உன் அருள் உண்டு-
(உன்னுடைய) கருணையுண்டு: திண் தோள் உரம் உண்டு - என்னுடைய
வலியதோளின் வலியும் உள்ளது;(எ-று.)

     இவையெல்லாம்மலரைக்கொணர்தற்குத் துணையாகுமென்றவாறு.
'திண்டோளுரமுண்டு'என்று தன்தோள்வலிமையைச் சொல்லுவதால்,
மறம்என்பது-ரோஷத்தை யென்க.                             (382)