(இ-ள்.) அருக்கனின்- சூரியனைக்காட்டிலும், மும் மடி - மூன்று மடங்கு மிகுதியாக, ஆர் ஒளி வீசும் - மிக்க பேரொளியை வீசுகிற,-உரு கிளர் மேனியை - உருவத்தோடு விளங்குகின்ற உடலை,ஊடு உற நோக்கா - உள்ளுறப் பார்க்கமுடியாமல், வீமன்-,-வெருகொடு-(புத்தியில்) அச்சமடைந்து, மீண்டுஉம் தாள்மிசை வீழ்ந்தனன் - மறுபடியும் (அந்த அநுமானது) பாதங்களில் வீழ்ந்து, சுருக்குக என்று துதித்தனன்-இந்தப் பேருருவத்தைச்) சுருக்கிக் கொள்வாயாக என்று தோத்திரஞ் செய்தான்; (எ-று.) கீழ் 49-ஆங்கவியில் "மோட்டுருத்தனைக்காட்டுக என்றிறைஞ்சினன் முதல்வன்" என்று பேருருவைக் காட்டுமாறு அனுமானைவீமன் இறைஞ்சினமை கூறப்பட்டதனால்,'மீண்டும்தாண்மிசை வீழ்ந்தனன்' என்றது. (393) 57.-அநுமான்தன் மேனியை யொடுக்கிக் கொள்ளுதல். அந்தமுமாதியு மற்றவருக்கஞ் செந்தமிழ்செய்து திரட்டினரைப்போல் அந்தரம்வானு மகண்டமுமொன்றா உந்தியமேனி யொடுக்கினனம்மா. |
(இ-ள்.)அந்தம்உம் ஆதிஉம் அற்றவருக்கு - ஆதியந்தமில்லாத கடவுளின் திறத்திலே, அம் செந் தமிழ் செய்து - அழகிய செந்தமிழ்ப் பிரபந்தத்தை யியற்றி, திரட்டினரை போல் - தொகுத்துள்ள ஞானியரைப்போல, அந்தரம் வான்உம் அகண்டம்உம் - அந்தரமென்று சொல்லப்படும் வானத்தையும் இந்த நிலவுலகத்தையும், ஒன்றுஆ உந்திய - ஒன்றாகச்செலுத்திய, மேனி - (தன்) மேனியை, ஒடுக்கினன் - சுருக்கிக் கொண்டான்; கடவுள்ஞானமுள்ளபெரியோர் அக்கடவுளின் திறத்துப் பக்திப் பாடல்கள் பல பாடித் திரட்டினும் தாம் அடங்கி நிற்பது போலஇவனும் அடங்கிநின்றானென்பதாம். அந்தமுமாதியுமற்றவருக்கு அம் செந்தமிழ்செய்து திரட்டினர் என்றது - நம்மாழ்வாரைக் குறிக்குமென்னலாம்: இனி முதலாழ்வார்களைக்காட்டு மென்னவுமாம்: வேறுவகை கூறுவாருமுளர். தமிழ்-திவ்யபிரபந்தத்திற்குக் காரணவாகுபெயர். அம்மா - வியப்பிடைச்சொல்: பேருருவை இவன் வேண்டியமாத்திரத்து ஒடுக்கினமை பற்றியது. (394) 58.-தன்பிழையைப் பொறுக்குமாறு வீமன் அநுமானிடம் வேண்டுதல். இந்திரசால மியற்றினரைப்போல் மைந்தொடுதொல்லையில்வடிவுகொள்பொழுதத்து அந்தமிலாயடி யேன்பிழையெல்லாம் புத்தியுறாதுபொறுத்தருளென்றான். |
(இ-ள்.)இந்திரசாலம் இயற்றினரை போல் - மாயவித்தை செய்தவரைப்போல, மைந்தொடு - (தன்) வலிமையுடனே, தொல் |