ரோடுஉம் - உனதுதம்பிமாரோடும், மின் அருகு பயில் - மின்னல் போன்ற திரௌபதிதன் னருகே (அக்கினிகாரியத்தின் பொருட்டுப்) பொருந்தப்பெற்ற, வேந்தொடுஉம் - யுதிட்டிரராசனோடும்,வாழ்வுஉற்று - (இவ்வுலகில் வாழவேண்டியநாள் முழுவதிலும்) வாழ்ந்திருந்து, (பிறகு), என் அருகு வருக-,என்றனன் - என்று கூறினான்;(எ-று.) மின் -உவமையாகுபெயர். வேந்து - பண்பாகுபெயர். (397) 61.-இயக்கரூர்க்குச்செல்லவழிகூறுமாறு வீமன் அநுமானைவேண்டுதல். அங்கவனம்மொழி கூறலுமையா எங்கணுநின்னுய ரின்னருளுண்டே பங்கயமாநிதி வாழ்பதியெய்தச் சங்கையினன்னெறி சாற்றுகவென்றான். |
(இ-ள்.) அங்கு- அப்போது, அவன் - அந்த அனுமான்,- அ மொழி - அவ்வார்த்தையை, கூறலும் - சொன்னவுடனே,-(வீமசேனன்அனுமானை நோக்கி),-'ஐயா! நின் உயர் இன் அருள் எங்கண்உம் உண்டு ஏ- உன்னுடைய உயரிய இனிய அருள் (எனக்கு) எங்கும் உள்ளதன்றே! (ஆதலால்), பங்கயம் மா நிதி வாழ் - பதுமநிதியுள்ளதான, பதி - ஊரை, எய்த - அடைதற்கு, சங்கை இல் நல் நெறி - சந்தேகிக்க வேண்டுவது இல்லாத நல்ல வழியை, சாற்றுக - சொல்வாயாக',என்றான்-;(எ-று.) பங்கயமாநிதி- பதுமநிதி: இது நவநிதிகளுள் ஒன்று: குபேரன் நவநிதி நாயக னாதலால்,அங்குப் பதுமநிதியும் உள்ளதென்க. (398) 62.-இதுமுதல்மூன்று கவிகள் - ஒருதொடர்: அநுமான் வாசமலருள்ளஇடத்திற்குச் செல்லும் நெறிகூறி அம்மலரைக்கொள்ளுதற்கு உரிய உபாயத்தையும் கூறுவது. என்றலுமிந்த வனத்தினதெல்லை ஒன்றியவோசனையோரிருநூறு சென்றபின்யோசனைசிற்சிலசென்றால் மன்றன்மலர்பொழில் வாவியின்மன்னும். |
(இ-ள்.)என்றலும்-என்று (வீமன் அநுமானை)வினாவியவுடனே,-இந்த வனத்தினது - இந்தக்கதலீ வனத்தின், எல்லை- எல்லையினின்றும்,ஒன்றிய ஓர் இருநூறு ஓசனைசென்றபின் - பொருந்திய இருநூறு யோசனைதூரங் கடந்து சென்றபின்பு, யோசனைசில் சிலசென்றால்-(பின்னுஞ்) சிலயோசனைதூரம்கடந்து போனால்,(அங்கு, மன்றல் மலர் - நறுமணமுள்ள இதுபோன்ற மலர், பொழில் வாவியின் - சோலையிலுள்ள நீர்நிலையிலே,மன்னும்-பொருந்தியிருக்கும்;(எ-று.) |