(இ-ள்.)உறுதிஉம் - (மலரைப் பெறுதற்கு உரிய) நல்ல உபாயங்களையும், ஒன்னலர் ஊக்கம்உம் - பகைவர்களது கலங்காத் திண்மையையும், ஏகும் நெறியினது எல்லையின்நீர்மைஉம்-செல்ல வேண்டும் வழியினது அளவின் தன்மையையும், நெறியில் குறிகள்உம் - வழியிலுள்ள அடையாளங்களையும், யாவைஉம் - மற்றுமுள்ள எல்லாவற்றையும், அன்பொடுகூறி-அன்புடனே சொல்லி,-அறிவு உடையான் - (ஐயந்திரிபில்லாத) ஞானத்தையுடைய அனுமான்,-அன்பொடுவிடை அளித்தான் - அன்புடனே (தம்பிக்கு) விடை கொடுத்தனுப்பினான்;(எ-று.) அனுமான்இளமையிற் சூரியனிடத்து எல்லா நூல்களையும்ஐயந்திரிபு அற ஓதி உணர்ந்த உயர்வுதோன்ற, அவனை'அறிவுடையான்'என்றார். இனி, அறிவு உடையான் - என்றுந் தனது இயற்கையறிவு கெடாதவனென்றுமாம். விடை - விடுத்தல்: ஐ - தொழிற்பெயர்விகுதி. ஒன்னலர் - ஒன்றலர்: மரூஉ: எதிர்மறை வினையாலணையும்பெயர்; சேராதவர் என்பது பொருள். (402) 66.-வீமன்அநுமானுக்கு முகமன்கூறிச் செல்லுதல். மொய்ம்புடைமாருதி தாளிணைமுன்னா வெம்பியகானிடை மேவியபயனிங்கு எம்பெருமானுனையெய்தினனென்னா நம்பியுநாழிகை யொன்றினடந்தான். |
(இ-ள்.)நம்பிஉம் - ஆடவரிற் சிறந்த வீமனும், மொய்ம்பு உடை மாருதி தாள் இணைமுன்னா- வலிமையையுடைய அனுமானது இரு திருவடிகளைத்தியானித்துக்கொண்டு, 'எம்பெருமான்- எமது தலைவனே! வெம்பிய கானிடை மேவிய பயன் - வெப்பம் பொருந்திய காட்டிலே (நான்) வந்ததன் பயனாக,உனைஇங்கு எய்தினன்-உன்னைஇவ்விடத்திலே அடைந்தேன்,'என்னா-என்று(உபசார வார்த்தை) கூறி, நாழிகை ஒன்றில் நடந்தான் - ஒரு நாழிகைப்பொழுதினுள்ளே நடந்துசென்றான்;(எ-று.) நாழிகை -இருபத்துநான்கு நிமிஷங்கொண்ட நேரம்;நாடிகா என்னும் வடமொழிச் சிதைவென்பர். மொய்ம்புஉடைமாருதி - (பகைவருடைய) வலிமையை அழிக்குந்தன்மையுள்ள அனுமான் என்றுமாம். எம்பெருமான் - அண்மைவிளி. (403) 67.-சக்கரமலையின்புறத்தைவீமசேன னடைதல். அக்கணமாசுவி னாசுகன்மைந்தன் மிக்குயர்விஞ்சையர் நாட்டிடைவிட்டுத் திக்குறைநாகர் திரண்டுதுதிக்குஞ் சக்கரநாக மதன்புடைசார்ந்தான். |
(இ-ள்.) அகணம்-அந்தக்ஷணத்திலே, ஆசுவின் - விரைவாக, ஆசுகன் மைந்தன் - வாயுகுமாரனாகியவீமசேனன்,-மிக்கு |