இச்சோலையைக்கண்களாற் பார்த்தற்கு நினைத்தாலும்(நம்மால்) வருந்துவார்கள்: (அங்ஙனமிருக்க), மதி இலாத மானுடா - அறிவில்லாத மனிதனே! வந்தது என் - (நீ இங்கே) வந்த காரணம் என்ன? உன்தன் ஆவி சிந்தும் முன் செப்புக - உனது உயிர் (எம்மால்) அழிதற்குமுன்பு சொல்லுக,'என்னா- என்றுகூறி, தீயோர் எல்லாம் - கொடிய அவ்வரக்கர் யாவரும், தெழித்தனர் - (வீமனை)அதட்டினார்கள்;(எ-று.) இமையவர்தாமும், உம்மை - உயர்வுசிறப்பு. நோக்கவும் என்ற உம்மை - இழிவுசிறப்பு. 'கண்ணால்'என்ற அவசியமில்லாத பதம், அவர்கள் கண்கள் இச்சோலையைப்பார்த்தற்கேற்ற சிறப்புடையன அல்லஎன்னும் இழிவை யுணர்த்தும்: அன்றி, மனத்தால் நோக்குதலினும் வேறுபாடு தோன்ற, 'கண்ணால்நோக்க'என்றதாகவுங் கொள்ளலாம். (429) 93.-அவ்வரக்கரின்பொருளில்லாச் சொல்லைக்கேட்டு வீமன் சிரித்தல். அருளிலாவரக்கரிவ்வா றகங்கரித்தரற்றுமிந்தப் பொருளிலாவுரைகட்கெல்லா முத்தரம்புகலானாகி இருளிலாமுத்தமன்ன வெயிற்றரும்பிலங்கநக்கான் தெருளிலாமதனைமுன்னமெரித்திடுஞ்சிவனைப்போல்வான். |
(இ-ள்.)தெருள் இலா-தெளிந்த அறிவில்லாமல் (தன்னையெதிர்த்துப்) பொருத, மதனை- மன்மதனை,முன்னம் - முன்னொருகாலத்திலே, எரித்திடும் - (உடம்பை) எரித்த, சிவனை-பரமசிவனை,போல்வான் ஒப்பவனாகிய[பேராற்றலுடைய]வீமன்,-அருள்இலா அரக்கர் - கருணையில்லாதஇராக்கதர்கள், அகங்கரித்து - செருக்குக் கொண்டு, இ ஆறு அரற்றும்-இந்தவிதமாகப் பிதற்றுகின்ற, இந்த பொருள் இலா உரைகட்கு எல்லாம் - பயனில்லாத இப்பேச்சுகளுக்கெல்லாம், உத்தரம் புகலான் ஆகி - விடைகூறாதவனாய்,இருள் இலா முத்தம் அன்ன அரும்பு எயிறு இலங்க - கருநிறமில்லாத [மிக்கவெள்ளொளியையுடைய] முத்துக்களையொத்தமுல்லையரும்புபோன்ற (தனது) பற்கள் சிறிது வெளிவிளங்கும்படி, நக்கான் - சிரித்தான்;(எ-று.) இருளில் ஆம் முத்தம் - இருளில் விளங்குதலைக்கொண்ட முத்தமுமாம். அழித்தற்றொழிலுடைமையாலும், சிரித்துப்பகை வரையழித்தலாலும், சிவனை ஈண்டு உவமைகூறியது. இங்கே, சிரிப்பு - வீரத்துஎழுந்த வெகுளிநகை. சிவபிரானது திவ்வியசக்தியை இத்தன்மையதென உணராது மற்றவர்களைப்போலவே அப்பிரானையும் வசப்படுத்தலாமெனக் கருதின அவிவேகத்தைப் பற்றி, 'தெருளிலாமதன்' என்றது. மானுடனான வீமனை அலட்சியப்படுத்தி அவ்வரக்கர் கூறியபடி நிகழாமல் வீமனே அவர்களை வெல்லுதலால் அவருரை பொருளிலாவுரை யாகும். (430) |