மேற்கவியில் வரும் 'சடாசுரனெனும்பெயர்ச்சழக்கன்' என்பதற்கு விசேஷணம். இரண்டாமடியும்,மூன்றாமடியும்,இல்பொருளுவமை. முதலடி - அவனது உடல்வலிமை மிகுதியை விளக்கும். சரிப்ப-சரிப்பது: தொகுத்தல். 'சுரும்பினை' என்றும், 'இரண்டண்டஞ்சுரும்பென விரும்பினன்'என்றும், 'வானிலா' என்றும் பாடம். சுரும்பு-மலை. (481) 6. | முருக்கினாண்மலருங்கறுத்திடச்சிவக்குமொய்யழல்பெய் செழுங்கண்ணன், அரக்கினாலுருக்கிக்கம்பிசெய்தென்னவவிர் பொலங் குஞ்சியன்வஞ்சத், திருக்கினாலறங்கள்யாவையுஞ்செகுக்குந் தீயவன்றீமையேபுரிந்து, தருக்கினாலமரர்யாரையுஞ்செகுக்குஞ் சடாசுரனெனும் பெயர்ச்சழக்கன். |
(இ-ள்.)முருக்கின் நாள் மலர்உம்-பலாசமரத்தினது புதிய [அன்று மலர்ந்த](மிகச்சிவந்த) பூவும், கறுத்திட-கரியதென்னும்படி, சிவக்கும் - மிகச்சிவந்த நிறமுள்ள, மொய் அழல் பெய் செழுகண்ணன் - நெருங்கின தீயையுமிழ்கிற பெருங்கண்களையுடையவனும், அரக்கினால்உருக்கி கம்பி செய்து என்ன - அரக்கை உருக வைத்து அதனாற்கம்பிகள் செய்தாற்போல, அவிர் - விளங்குகிற, பொலம் குஞ்சியன் - பொன்னிறமான செம்பட்டமயிர்முடியுடையவனும், வஞ்சம் திருக்கினால்-வஞ்சனையின் மாறுபாடுகளால், அறங்கள் யாவைஉம் செகுக்கும் - தருமங்களெல்லாவற்றையும் அழிக்கின்ற, தீயவன்-கொடுங்குணமுடையவனும் ஆகிய, தீமைஏ புரிந்து தருக்கினால்அமரர் யாரைஉம் செகுக்கும் - தீங்குகளையேசெய்து அகங்காரத்தால் தேவர்களெல்லோரையும் அழிக்கின்ற, சடாசுரன் எனும் பெயர் சழக்கன் - சடாசுரனென்னும் பெயரையுடைய மூர்க்கன்,-(எ-று.)-'எய்தி, கொண்டு, பறந்தனன்' என மேற்கவியில் முடியும். முருக்கினாண்மலரும் கறுத்திடச்சிவக்குங்கண் - கருமையோடு செம்மைக்கு எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு வேறுபாடு முருக்கமலரின் செந்நிறத்தோடு அரக்கன்கண்ணின் செந்நிறத்துக்கு உள்ளதென்பது கருத்து. இரண்டாமடி-தற்குறிப்பேற்றம். சழக்கன்- வழக்குக்கு மாறுபாடாக நடப்பவன். (482) 7.-சடாசுரன்திரௌபதியை வானத்துத் தூக்கிக்கொண்டுபோதல். அந்தணர்வடிவங்கொண்டிலங்கையில்வா ழாதிவாளரக்கனைப் போலச், செந்தழளித்தமடமயிலிருந்த சிற்பவண்சாலையினெய்திக், கொந்தவிழலங்கற்கொற்றவரறியா வகையொருகோண் மறைபிதற்றிப், பைந்ததொடிதனைக்கொண்டந்தரந்தன்னிற் பறந்தனன் பழியுண ராதான். |
(இ-ள்.) பழிஉணராதான் - பழியின் கொடுமையை அறியாதவனாகிய அவ்வரக்கன்,-இலங்கையில்வாழ் ஆதி வாள் அரக் |