காளவிடம் -காலகூடவிஷம்: பிரளயகாலத்து நஞ்சுமாம். அமுதளிக்கும் என்று பிரதிபேதம். இதுமுதல்இச்சருக்கமுடியுமளவும் - பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று மாச்சீரும், மற்றைமூன்றும் காய்ச்சீரு மாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தங்கள். (497) 22.-வீமன்திரௌபதிமுதலியவரோடு தாம் இருந்தவனத்தையடைதல். அடாதுசெய்சடாசுரன தாவியையுமம்பொற் படாமுலைகடாமுடையபைந்தொடியையும்போய்த் தடாவமர்விடாதுடைய தம்பியரையுங்கொண்டு இடாவிறல்கொண் மாருதியிருக்கும்வனமுற்றான். |
(இ-ள்.)விறல்கொள் மாருதி - வெற்றியைக்கொண்ட வீமசேனன்,- அடாது செய்சடாசுரனது ஆவியைஉம் - (பிறர்மனைவிழைதலாகிய) தகாத காரியத்தைச் செய்த சடாசுரனது உயிரையும், அம் பொன் படாம் முலைகள் தாம் உடைய பைந்தொடியைஉம் - அழகிய பொன்னாபரணங்களையும் கச்சையு மணிந்த தனங்களையும்பசும்பொற்றொடியையுமுடைய பாஞ்சாலியையும், போய்தடா அமர் விடாது உடைய தம்பியரைஉம் - (சடாசுரனைஎதிர்த்துச்)சென்று தடுத்துப் போர்செய்தலைநீங்காமலுடைய தம்பிமாரான நகுலசகதேவரையும், கொண்டிடா - கைக்கொண்டு, இருக்கும் வனம் உற்றான்-(தாம்)வசிக்கிற காட்டை அடைந்தான்;(எ-று.) சடாசுரனைக்கொன்றுமனைவியோடுந்தம்பியரோடும் மீண்டு வந்தனனென்பதாம். அடாது - எதிர்மறையொன்றன்பால் வினையாலணையும்பெயர். அடாது என்பதைச் சாதியொருமையாக் கொண்டு, எல்லாத்தீச்செயல்களையும்அடக்கலாம். பொன் - பொன்னாபரணங்களுக்குக்கருவியாகுபெயர். படாம்-படமென்பதன் திரிபு. அம் பொன் படா முலைஎன எடுத்து, அழகிய பொன் போல்நிறத்தையுடைய சுணங்கையுடைய சாயத தனங்க ளென்று முரைக்கலாம்; இவ்வுரைக்கு, பொன் - உவமையாகுபெயர். தடா, கொண்டிடா - உடன்பாட்டு வினையெச்சங்கள். தடா அமர் என எடுத்து - பிறரால் தடுக்கவொண்ணாதபோ ரென்றுங் கொள்ளலாம். இச்செய்யுளில் டகர ஆகாரம் அடுத்தடுத்து வந்தது, பிராசமென்னுஞ் சொல்லணி. (498) 23.-வீமன்தருமபுத்திரனிடம் நிகழ்ந்தன கூறினபின் தருமபுத்திரன்எல்லாருடனும் பதரிகாச்சிரமத்தை யடைதல். உற்றபடிதம்முனிரு தாடொழுதுரைத்தான் மற்றவனுமங்குறையு மாமுனிவரோடும் கொற்றமிகுதம்பிய ரொடுங்குழுமியன்றே நற்றபதிநாரணன தாச்சிரமநண்ணி. |
|