பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்331

12.தண்டரளமாதிநவ ரத்நவொளிதானே
எண்டிசைவிளக்கும்வரை யின்புதுமையெல்லாம்
கண்டுவகைகொண்டு நனிகண்ணிணைகளித்தான்
புண்டரிகவாணிருத னைப்பொருதழித்தான்.

     (இ-ள்.)(இவ்வாறு), தண் தரளம் ஆதி நவ ரத்நம் ஒளி தான்ஏ
எண்திசை விளக்கும் வரையின் புதுமை எல்லாம்-குளிர்ச்சியான
(ஒளியையுடைய) முத்து முதலிய ஒன்பதுவகையிரத்தினங்களினொளியே
(சென்று) எட்டுத்திசைகளையும்விளங்கச்செய்விக்கப்பெற்ற
அவ்விரத்தினகிரியினது அதிசயங்களையெல்லாம்,வாள் புண்டரிகன்
நிருதனைபொருது அழித்தான் - கொடிய புண்டரீகனென்னும் இராக்கதனை
முன்னேபோர்செய்துகொன்றவனானவீமன், கண்டு - பார்த்து, உவகை
கொண்டு-மகிழ்ச்சிபெற்று, கண் இணைநனி களித்தான் - (தனது)
இரண்டுகண்களும் மிகக்களிக்கப்பெற்றான்;(எ-று.)

     இக்கவியின்முதலிரண்டடிகளால், இரத்தினகிரி யென்பது -
இரத்தினங்களைமிகுதியாகவுடைய தென ஏதுப்பெயராமாறு உணர்த்தப்பட்டது.
புண்டரிக னென்னும் உயர்திணைப்பெயரின் ஈறுகெட்டது.  புண்டரிகன் -
புண்டரீகன் என்பதன் குறுக்கல்.  நவரத்நம் - முத்து, வைடூரியம், வைரம்,
கோமேதகம், நீலம், பவழம், புட்பராகம், மரகதம், மாணிக்கம் என்பன.  (514)

13.-வீமன்அந்தக்கிரியினின்று அளகாபுரியின்
வாயில்களைக்கடந்து அதற்கு வடமேற்றிசையில் நிற்றல்.

அக்கிரியினின்றுமிழி வுற்றளவில்செல்வம்
மிக்கவளகேசனகர் வெய்தின்விரைவெய்தித்
தொக்கமணிவாயிலொரு நாலுமொருதானே
புக்குவடமேற்றிசையி னின்றிதுபுரிந்தான்.

     (இ-ள்.)(பின்பு), அ கிரியினின்றும் இழிவுற்று - அந்த இரத்தின
மலையினின்றும்இறங்கி, அளவு இல் செல்வம் மிக்க அளகேசன் நகர்-
வரையறையில்லாத ஐசுவரியம் மிகுந்த குபேரனது அளகா பட்டணத்தை,
வெய்தின் விரைவு எய்தி - உக்கிரமான வேகத்துடனே யடைந்து, தொக்க
மணி வாயில் ஒரு நால்உம் ஒரு தானே புக்கு - நெருங்கியுள்ள
இரத்தினங்களைப்பதித்த(அந்நகரத்தின்) வாயில்கள் நான்கிலும்
தானொருவனாகவேபிரவேசித்து[நான்குவாயில்களையுங்கடந்துஎன்றபடி],
வடமேல் திசையில் நின்று - (அந்நகரத்தின்) வடமேற்குப்பக்கத்தில்
நின்றுகொண்டு, இது புரிந்தான் - இதனைச்செய்தான்;(எ-று.)அத்தொழில்
இன்னதென மேற்கவியில் விளங்கும்.                  (515)