18.-குபேரனுடையசேனைத்தலைவனான மணிமானிடத்தில்வீமன் மீண்டும் வந்திருத்தலை அவ்விஞ்சையன்கூறுதல். மேனாளொருமலர்க்காரணம்விறல்வாணிருதரைமேல் வானாடர்தமுலகத்தடன்மறலிக்கிடுமறவோன் ஆனாமுனிவினன்மீளவுமணுகுற்றனனென்னச் சேனாபதிமணிமானுழைவந்தேயுரைசெய்தான். |
(இ-ள்.) மேல்நாள்-முன்னொருநாளில்,ஒருமலர் காரணம்-ஒரு பூவின்காரணமாக, விறல் வாள் நிருதரை-வலிமையுடைய ஆயுதங்களையேந்தினஅரக்கர்களை,மேல் வானாடர்தம்உலகத்து- மேலுள்ள தேவர்களதுலோகத்தில்[வீரசுவர்க்கத்தில்],(சேரும்படி), அடல் மறலிக்கு இடும்-கொடுமையையுடைய யமனுக்குப் பலியாகக்கொடுத்த, மறவோன்-வலிமையையுடைய மனிதன், ஆனாமுனிவினன்-நீங்காத கோபத்தையுடையவனாய்,மீளஉம் அணுகுற்றனன் - மறுபடியும் வந்து சேர்ந்தான், என்ன - என்று, சேனாபதிமணிமான் உழை வந்து- குபேரசேனைக்குத்தலைவனானமணிமானென்பவனிடத்தில் வந்து, உரை செய்தான் - (அவ்வித்தியாதரன்) கூறினான்;(எ-று.)-ஆனாமை-நீங்காமை; ஆன்-பகுதி. அணுகுற்றனன், உறு-துணைவினை. (520) 19.-இதுமுதல்மூன்று கவிகள் - குளகம்: மணிமான்சினந்துகுபேரனுக்குத் தெரிவியாமலே பொருது கொல்வேனென்று சேனைகளைஏவுதலைத்தெரிவிக்கும். அவன்வந்திதுபகராதமு னதிவேகமொடழலாச் சிவனண்பனதுயிர்நண்பனும் விழிசெந்தழல்பொழியப் பவனன்றருசிறுமானுட னவனோபடிமுதலாம் புவனந்தொழுபெருமானக ரிடைவந்திவைபுரிவான். |
(இ-ள்.)அவன்-அந்த வித்தியாதரன், வந்து-,இது-இவ்வார்த்தையை, பகராத முன்-சொல்லுதற்குமுன்னே [சொன்னவுடனேயென்றபடி],சிவன் நண்பனது உயிர் நண்பன்உம்-சிவனுக்குச் சினேகிதனானகுபேரனது உயிரோடொத்த நட்பினனாகியஅம்மணிமானும்,-அதிவேகமொடுஅழலா- மிகுந்தஉக்கிரத்தன்மையோடு கோபித்து, விழி செம் தழல் பொழிய-கண்கள் சிவந்தநெருப்பைச் சொரிய, 'பவனன்தரு சிறு மானுடன் அவன்ஓ- வாயுபெற்ற சிறிய மனிதனானஅவனோ,படி முதல் ஆம் புவனம் தொழு பெருமான் நகரிடை வந்து இவை புரிவான் -பூமிமுதலிய உலகங்களினுயிர்களெல்லாம் வணங்குகிற பெருமையையுடைய குபேரனது நகரத்திலே வந்து இச்செயல்களைச்செய்யத்தக்கவன்! (எ-று.) குபேரன் முன்னொருகாலத்தில்கைலாசமலையின்ஒரு சாரலிலிருந்து பெருந்தவஞ்செய்து சிவதரிசனத்தைப் பெற்று அவனருளால் அவனுக்கு நண்பனாயினான்;இவ்வரலாறு, உத்தரராமாணயத்திலுள்ளது. சிவன் நண்பனானகுபேரனது நகரத்தில் ஒரு சிறு |