முதனிலைத்தொழிற்பெயர். இனி, காணார்முனைக்குஎன்றும்வீழ் வந்த சாயகம் என்பதற்கு-பகைவரோடு பொரும்போர்க்களத்தில் எப்பொழுதும் ஆலமரத்தின் விழுது அம்மரத்துக்கு உதவுவதுபோலத் தனக்கு உதவிசெய்யும் அம்பு என்றும் உரைக்கலாம். ஸாயகம் - வடசொல். (526) 25.-சாலேந்திரனென்றபடைத்தலைவன் வீமனதுமனவுறுதியறியச் சில கூறலுறல். அக்காலையில்விறலோனிலையறிவானுயரறிவால் தக்கார்புகழ்சாலேந்திரன் றன்சேனையைத்தகையாக் கைக்கார்முகவயமாருதி திருமுன்கடிதோடிப் புக்கானொருதேர்மேனனியிவைநின்றுபுகன்றான். |
(இ-ள்.) அ காலையில்- அந்தச்சமயத்தில், விறலோன் நிலை அறிவான்-வலிமையையுடைய வீமனது மனவுறுதிநிலையைஅறியும் பொருட்டு, உயர் அறிவால் தக்கார் புகழ் சாலேந்திரன்-சிறந்த அறிவினால் தகுந்தபெருமையையுடைய சான்றோராற்புகழப்படுகின்ற சாலேந்திரனென்பவன், தன் சேனையைதகையா - தனதுசேனையை (வீமனுடன் போர்செய்யாதபடி) தடுத்து,-ஒருதேர்மேல்-(தனது) ஒப்பற்றதொரு தேரின்மேலே, கை கார்முகம் வய மாருதி திருமுன் கடிது ஓடி புக்கான் - கையில்வில்லையுடையவலியவீமனது எதிரில் விரைவாகஓடிச்சென்று சேர்ந்து, நின்று - (அங்கு) நின்று, இவை- இவ்வார்த்தைகளை,நனி புகன்றான்-மிகுதியாகக்கூறினான்;(எ-று.)- அவற்றைமேற்கவியிற் கூறுகிறார். அறிவால்தக்கார் என இயைத்து-ஞானவ்ருத்தர் என்றாவது,அறிவால் புகழ் என இயைத்து-அறிவுவிஷயத்திலே புகழப்படுகிற என்றாவது கருத்துக்கொள்க. திருமுன் - சன்னிதானம். வீமனது உயர்வும் சாலேந்திரனது இழிவும் தோன்ற, வீமனதுமுன்னிடத்தை 'திரு'என்ற சொல்லால் விசேடித்தார். (527) 26.-சாலேந்திரன்'உனதுஉயிர்போகும்முன்நீ யார்? எனக் கூறுக'என்று வீமனைவினாவல். சிவனோதிசைமுகனோவதிர்திரையாழியிற்றுயில்கூர் பவனோபருவரைமார்புறப்பகிருஞ்சுடர்வடிவே லவனோதிறனரவாகனனளகாபுரிவருவோன் எவனோவுனதுயிர்சிந்துமுன்யார்நீயுரையென்றான். |
(இ-ள்.)'சிவனோ-? திசை முகன்ஓ-(நான்குதிக்கையும் நோக்கின) முகம்நான்கையுடைய பிரமனோ? அதிர் திரை ஆழியில் துயில் கூர்பவன்ஓ - ஆரவாரிக்கின்ற அலைகளையுடையகடலிலே யோகநித்திரை செய்தருளுந்திருமாலோ? பரு வரை மார்பு உற பகிரும் சுடர் வடிவேலவன் ஓ-பருத்த கிரௌஞ்சகிரியினது நடுவிடத்திற் பொருந்தும்படி பிளந்திட்ட ஒளியையுடைய கூர்மையான வேலாயுதத்தை |