சிதறியோடுகிறமானின் கூட்டம்போல, வெருவி-பயந்து, தியங்கா" அறிவுமயங்கி, உளம் நொந்து-மனம்வருந்தி, இருவர் ஒரு நீள் நெறி இயங்கலர்-இரண்டுபேர் ஒருபெரிய வழியிலே செல்லாமல் [தனித்தனி சிதறுண்டு],விரைந்து - துரிதமாக, பொருவு இல் அளகாபுரி புகுந்தனர் - ஒப்பில்லாத அளகாபட்டணத்தினுட் சென்று சேர்ந்தார்கள்;(எ-று.)-உழுவை- வீமனுக்கும், மானினம் - விஞ்சையர் குழாத்துக்கும் உவமை. (548) 47.-உயிரொழிந்தோர் தவிரத் தோற்றோடியவிஞ்சையர் மணிமானிடம் தம் நிலையைத்தெரிவித்தல். இஞ்சிமதில்வாயரணம் யாவுமிகல்புரிவான் அஞ்சினர்கள்விஞ்சைய ரடைந்தனர்களழகார் மஞ்சனையமேனிமணிமான்முனமடைந்தே துஞ்சினரொழிந்தவ ரவற்றொழுதுசொன்னார். |
(இ - ள்.)இகல் புரிவான் அஞ்சினார்கள்-(மீண்டும்) போர் செய்தற்குப் பயந்தவர்களும், துஞ்சினர் ஒழிந்தவர்-(போரில்) இறந்தவர்கள் போக மிகுந்தவர்களுமாகிய, விஞ்சையர்-வித்தியாதரர்கள், இஞ்சி - மதிலிலும், மதில் வாய் - மதிலிடையிலேயுள்ள கோபுரவாயில்களிலும், அரணம் யாஉம் - (மற்றுமுள்ள)காப்பிடங்களெல்லாவற்றிலும்,அடைந்தனர்கள் - (போய்ப் பதுங்கிச்)சேர்ந்தவர்களாய், (பிறகு), அழகு ஆர் மஞ்சு அனைய மேனி மணிமான்முனம் அடைந்து - அழகுநிறைந்த மேகத்தை யொத்த உடம்பையுடையமணிமானென்பவனது எதிரிலே சேர்ந்து, அவன் தொழுது-அவனைநமஸ்கரித்து, சொன்னார்- (தமது நிலைமையைக்)கூறினார்கள்; (எ-று.)-அரணம்-கோட்டையின் உள்ளிடங்கள். (549) 48.-அதுகேட்டமணிமான் வெகுளுதல். அந்நிலையுணர்ந்துமணிமானுமவிர்சோதிப் பொன்னசலமொத்துயர் புயத்துணைதுடிப்ப மன்னுபுருவச்சிலைவளைத்துமழைமுகில்போல் மின்னிலகநக்குருமெ னத்தனிவெகுண்டான். |
(இ - ள்.) அநிலைஉணர்ந்து-(அவர்களது) அந்த நிலைமையை அறிந்து, மணிமானும்-, அவிர் சோதி பொன் அசலம் ஒத்து உயர் புயம் துணைதுடிப்ப-விளங்குகின்ற ஒளியையுடைய பொன்மயமான மேருமலையைப்போன்று உயர்ந்துள்ள (தனது) இரண்டுதோள்களும் துடிதுடிக்க, மன்னு புருவம் சிலைவளைத்து-பொருந்தினவிற் போன்ற (தனது) புருவத்தை (க்கோபத்தால்) வளையநெறிந்து,மழை முகில் போல்- மழை பெய்யுந் தன்மையுள்ள காளமேகம்போல, மின் இலக நக்கு- மின்னல்போன்றஒளி வெளிவிளங்கும்படி சிரித்து, உரும் என தனி வெகுண்டான் - இடிபோல ஒப்பில்லாது கோபங்கொண்டான்;(எ - று.) மலைகளுட்சிறந்ததும் பெரியது மாதலால், மேருவை உவமை கூறினார். மழைமுகில்என்றதற்கேற்ப, சிலையும்மின்னும் உருமும். (550) |