பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்355

58.-வீமனெய்தஅஸ்திரத்தால் மாயையொழிதலின்
வருணனை.

அசைமணிக்கொடிகொடே ரருக்கன்றன்னெதிர்
நிசியெனப்பறந்தது நீலமேனியான்
வசையறக்குரிசிலுக் கருளும்வாளியால்
திசையுறப்பரந்தமர் செய்தமாயையே.

     (இ-ள்.)நீலம்மேனியான்-நீலநிறமுடைய திருமாலின் திருவவதாரமான
கண்ணபிரான், வசை அற-பழிப்பில்லாதபடி [புகழ்பொருந்த],குரிசிலுக்கு-
பெருமையிற்சிறந்த வீமனுக்கு, அருளும்-கொடுத்தருளின, வாளியால்-அந்த
அம்பினால்,திசை உற பரந்து அமர் செய்த மாயை-எல்லாத் திக்குக்களிலும்
பொருந்தப் பரவிப் போரைச்செய்த (அந்தமணிமானது) மாயையானது, அசை
மணி கொடி கொள் தேர் அருக்கன் தன் எதிர் நிசி என-அசைகின்ற
அழகிய துவசத்தைக்கொண்ட தேரையுடைய சூரியனுக்கு எதிரில்
இராத்திரிபோல, பறந்தது-விரைந்துஓடிப்போயிற்று;(எ-று.)

     சூரியனொளிமுன்இருள்போல இருந்தவிடந்தெரியாமலொழிந்தது,
திருமாலம்பின்முன் மணிமான்மாயை யென்க.  மாயையைக் கருநிறமுடைய
தென வருணித்தல் கவிமரபாதலால், அதற்கு நிசி உவமை கூறப்பட்டது.
கீழ்க்கவியிற் கூறிய விஷயத்தையே இக்கவியில் உவமைமுகத்தாற் கூறி
விளக்கினாராதலின், கூறியது கூறலன்றென்க.                (560)

59.-வீமனும்மணிமானும் முறையே புவியிலும்வானிலும்
நின்று பொருதல்.

விறல்புனைவீமனும்விஞ்சைவேந்தனும்
நிறைபுவிவிசும்பின்மே னின்றுபோர்செய்தார்
எறுழ்வலியிராகவற் கிளையவார்சிலைச்
சிறுவனுமிந்திர சித்துமென்னவே.

     (இ-ள்.) எறுழ்வலி இராகவற்கு இளையவார் சிலைசிறுவன்உம்-
மிக்கவலிமையையுடைய இராமபிரானுக்குத் தம்பியான நீண்ட வில்லையுடைய
லக்ஷ்மணனும்,இந்திரசித்துஉம் என்ன-(இராவணன் மகனான)
இந்திரசித்தென்பவனும் போல,-விறல்புனைவீமன்உம்-வெற்றியைக்கொண்ட
வீமசேனனும், விஞ்சை வேந்தன்உம்-வித்தியாதரர்க்குத் தலைவனான
மணிமானும்,(முறையே), நிறை புவி விசும்பின்மேல் நின்று-நிறைந்த
பூமிமேலும் ஆகாயத்தின்மேலும் நிலைநின்று, போர் செய்தார்-போரைச்
செய்தார்கள்;(எ-று.)

    இராமராவணயுத்தகாலத்தில் இந்திரசித்து மாயையால் வானத்திலும்
இலக்குமணப்பெருமான் நிலத்திலும் நின்று பெரும்போர் செய்தவாறு போல,
இப்பொழுது மணிமான் மாயையால் வானத்திலும் வீமன் நிலத்திலும் நின்று
போர்புரிந்தன ரென்க;உவமையணி.  வீமன் விஞ்சைவேந்தன் எனக் கூறிய
முறைமைக்கேற்ப,புவி விசும்