பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்357

     (இ-ள்.) சூலம்உம்-(தன்மேல் எறியப்பட்ட அந்தச்) சூலாயுதமும்,
தனதுமேல் சூலம்ஏவினோன்கோலம்உம்-தன்மேலே சூலாயுதத்தையெறிந்த
அம்மணிமானது வடிவமும், பொடி பட-துகளாம்படி, மீளிஉம்-
வீரனானவீமனும்,-கொதித்து- கோபித்து, மூல பங்கயம் மறை முனிவன்
வாளியை-(பிரபஞ்சததோற்றத்துக்கு) ஆதிகாரணமான (திருமாலின்)
நாபீகமலத்தில்தோன்றின வேதம்வல்லவனான(கடவுளைத்
தியானஞ்செய்யுந்தன்மையுள்ள) பிரமதேவனது அஸ்திரத்தை, ஆலம்உம்
குளிர்வு உற அழல - கொடிய விஷமும் சாந்தமடையும்படி கொதிக்குமாறு,
வீசினான்-பிரயோகித்தான்;  (எ-று.)

     ஆலம்-ஹாலம்;வடசொல்.  ஆலமுங் குளிர்வுற-இந்தஅஸ்திரத்தின்
கொடுமைக்குமுன் விஷமுங் கொடுமையுடையதன் றென்னும்படி யென்க.(563)

62.பிரமன்வெஞ்சரம்வலி பெற்றவிஞ்சையன்
மருமமெங்கணுஞ்செறிந் துருவமாழ்கியே
உருமின்வெங்குரலுட னொடுங்கிமண்மிசைக்
கருமுகில்வீழ்ந்தெனக் கலங்கிவீழவே.

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ-ள்.)பிரமன் வெம் சரம்-கொடிய அந்தப்பிரமாஸ்திரமானது, வலி
பெற்ற விஞ்சையன் மருமம் எங்கண்உம் செறிந்து-வலிமையைக் கொண்ட
வித்தியாதரனாகியஅம்மணிமானது மார்பு முழுவதிலும் பரவி, உருவ-
அழுந்தித்தைத்துச்செல்லவே, (அவன்), மாழ்கி - மயங்கி, உருமின் வெம்
குரலுடன் - இடிமுழக்கம்போன்ற கொடிய கண்டத்தொனியுடனே, ஒடுங்கி-
நிலைதளர்ந்து, மண்மிசை-பூமியிலே, கரு முகில் வீழ்ந்து என-கரியமேகம்
விழுந்தாற்போல, கலங்கி வீழ-பொறிகலங்கி விழுந்திட,-(எ-று.)-
வீழவென்னும்வினையெச்சம்,மேற்கவியில் 'சாய்ந்தனர்'முதலிய
முற்றுக்களோடு முடியும்.

    பிரமன்சரம்-பிரமனைத்தெய்வமாகவுடைய அம்பு.  மருமம்எங்கணும்-
நெற்றி கண்டம் மார்பு முதலிய முக்கியஸ்தானங்கள் எல்லாவற்றிலும்
என்றும் உரைக்கலாம்;மருமம்-உயர்நிலை.                       (564)

63.அந்தரந்தரம்புக வனந்தரம்படைத்
தந்திரத்தலைவருந்தளர்ந்துசாய்ந்தனர்
உந்தினர்கரிபரி யிரதமூர்புக
முந்தினதமதுயிர் கொண்டுமுந்தினார்.

     (இ-ள்.)அனந்தரம் - பின்பு, அந்தரம் தரம் புக-தேவலோகமும்
அச்சமடைய, படை-(அவ்வீமனது) ஆயுதங்களால், தந்திரம் தலைவர்உம்-
(சாலேந்திரன் முதலிய) சேனைத்தலைவர்களும்,தளர்ந்து-நிலைகலங்கி,
சாய்ந்தனர்-தோற்றவர்களாய், கரி பரி இரதம் உந்தினர்-யானைகளையுங்
குதிரைகளையுந்தேர்களையுஞ்செலுத்திக்கொண்டு, முந்தின தமது உயிர்
கொண்டு-(எல்லாப்பொருள்களினுஞ்) சிறந்த