பக்கம் எண் :

364பாரதம்ஆரணிய பருவம்

73.-உடனேகடோற்கசன் வந்த 'பணியாது?' என,
தருமன் வீமன்நிலையைக்கூறுதல்.

புந்திசெய்தவன்முன்னம் புதல்வனுமொருதேர்மேல்
வந்தனன்விரைவோடும் வணங்கினனிருதாண்மேல்
எந்தைசொலடிநாயேன் பணிவிடையெதுவென்றான்
தந்தையுநிருதன்றன் றாதைதனிலைசொன்னான்.

     (இ-ள்.)புந்தி செய்தவன் முன்னம் - (இங்ஙனம்) நினைத்தல்செய்த
தருமனது எதிரில், புதல்வன்உம் - (வீமனது) குமாரனானகடோற்கசனும்,
ஒரு தேர்மேல் விரைவோடுஉம் வந்தனன் - (தனது) ஒரு தேரின்மேலேறித்
துரிதமாகவந்து, இரு தாள்மேல் வணங்கினன் - (தருமனது)
உபயபாதங்களின்மேல் விழுந்துநமஸ்கரித்து, 'எந்தை- என்தந்தையே!
சொல் - சொல்வாய்;அடி நாயேன் பணி விடை எது-(உனது) அடியவனும்
நாய்போற்கடைப்பட்டவனுமான எனக்கு (நீ) நியமிக்குங் கட்டளையாது?'
என்றான்-என்று(தருமனைநோக்கிக்) கூறினான்;தந்தைஉம்-(அவனது
பெரிய) தாதையான தருமனும், நிருதன்தன் தாதைதன் நிலைசொன்னான்-
அரக்கனானஅக்கடோற்கசனதுதந்தையான வீமனது
நிலைமையை(அவனுக்கு)க்கூறினான்;(எ - று.)

     'புந்திசெய்வதன்முன்னம்'என்ற பாடத்துக்கு-(தன்னைஅவன்)
நினைத்தற்குமுன்பேயென்க;மிகவிரைவில் என்றபடியாம்.  நாயேன்-மிக்க
பணிவாற் கூறும் வார்த்தை.                                 (575)

74.-கடோற்கசன்யாவரையும் தேரிலேற்றிக்கொண்டு
அளகாபுரிக்குவானமார்க்கமாகச் செல்லுதல்.

அக்கணமதுகேளா வவரனைவரையுங்கொண்டு
இக்கணமிடையூறாமெழுமெழுமெழுமென்னா
முக்கணனுயிர்நண்பன் வாழ்தருமூதூர்வாய்
திக்குறநெடுவானிற் சென்றனனொருதேர்மேல்.

      (இ- ள்.) அது கேளா - அந்தத்தருமன்வார்த்தையைக்கேட்டு,
'இடையூறுஆம்-(என் தந்தைக்குத்) துன்பம் உண்டாகக்கூடும்;இ கணம் -
இப்பொழுதே, எழும் எழும் எழும் - மிகவிரைவாகப் புறப்படுங்கள்',
என்னா-என்றுகூறி,அவர் அனைவரைஉம்-(தருமன்முதலிய)
அவர்களெல்லோரையும், ஒரு தேர்மேல் கொண்டு - ஒப்பற்ற (தனது)
தேரின்மேல் ஏற்றிக்கொண்டு, முக்கணன் உயிர் நண்பன் வாழ்தரு முது ஊர்
வாய் திக்கு உற - மூன்றுதிருக்கண்களையுடையசிவபெருமானது
பிராணசிநேகிதனானகுபேரன் வாழ்கிற பழமையான அளகாபுரி பொருந்திய
வடதிசையிற் சேரும்படி, நெடு வானில்-பெரிய ஆகாயமார்க்கத்திலே, அ
கணம் - அப்பொழுதே, சென்றனன் - போனான்;(எ - று.)

    இக்கணம்என்பதை இடையூறாம்என்பதனோடும்இயைக்கலாம்.
எழும் என்ற முற்று முக்கால்அடுக்கினது, விரைவுபற்றி.  சூரி