77.-தருமன்வீமன்மீதுசினந்துகூறிக் கொண்டிருக்கும்போதுஅங்குநிகழ்ந்ததைக் குபேரனிடஞ்சொல்லஒருதூதுவன் செல்லல். பொற்றொடிமொழியாலிப்போதொருபொருளாக்கிச் செற்றனைசிவனண்பன்சேனையைநீயென்னாக் கொற்றவனிளையான்மேற்கொதித்தனமொழிபோதங்கு உற்றதையுரைசெய்வா னோடினனொருதூதன். |
(இ - ள்.)பொன் தொடி மொழியால்-பொன்னினாலாகிய தொடியென்னும் வளையையுடையமனைவியினதுவார்த்தையைக் கேட்டு அதனால்,இ போது ஒரு பொருள் ஆக்கி - (எளிய) இந்தப்பூவை ஒரு பெரும்பொருளாகக்கருதி, சிவன் நண்பன் சேனையை- சிவனது சிநேகிதனானகுபேரனது சேனையை,நீ-, செற்றனை- அழித்தாய், என்னா - என்று, கொற்றவன் - வெற்றியையுடைய தருமன், இளையான்மேல்- (தன்) தம்பியான வீமன்மேல், கொதித்தன-கோபமுள்ள சிலவார்த்தைகளை, மொழிபோது - சொல்லுகிறபொழுதில்,-அங்கு உற்றதை உரைசெய்வான் - அவ்விடத்தில் [அப்பொழுது]நடந்த இச்செய்கையைச் சொல்லும் பொருட்டு, ஒருதூதன்-, ஓடினன் - (குபேரனிடம்) விரைந்து சென்றான்;(எ-று.)- பொற்றொடி-வேற்றுமைத்தொகையன்மொழி. நிகழ்செய்தியைச் சொல்வதனால்,சொல்பவனை'தூதன்'என்றார். (579) 78.-சென்ற தூதுவன்போர்க்களத்து நிகழ்ந்ததையெல்லாம் குபேரனிடங் கூறுதல். அழுதறல்குதிபாயுங் கண்ணினனயிலம்பால் உழுதுடன்முழுதெல்லா முடனுகுசெம்புண்ணீர் வழிதரமனமெல்லா மறுகுறவிறைபொற்றாள் தொழுதனனியல்பெல்லாந் துணிவுறும்வகைசொன்னான். |
(இ - ள்.)(சென்ற தூதுவன்),-அழுது அறல் குதி பாயும் கண்ணினன் - (தனது இனத்தவர்பலரும்அழிந்த சோகத்தால்) புலம்பி அச்சோகக்கண்ணீர் பெருகுகின்ற கண்களையுடையவனாய்,அயில் அம்பால் உழுது உடல்முழுது எல்லாம் உடன் உகு செம் புண்நீர் வழிதர - கூர்மையான வீமனம்பினாலேதைக்கப்பட்டு (த் தனது) உடம்பு முழுவதிலும் எங்கும் ஒருங்குபெருகுகிற சிவந்தஇரத்தஞ் சொரியவும், மனம் எல்லாம் மறுகுற - (தனது) மனம்முழுவதுங் கலங்கவும், இறை பொன் தாள் தொழுதனன்-(தனது) தலைவனானகுபேரனது அழகிய பாதங்களைவணங்கி, இயல்பு எல்லாம் - நடந்த செய்கைமுழுவதையும், துணிவு உறும் வகை - நிச்சயமாக அறியும்படி, சொன்னான்- கூறினான்;(எ - று.) புண்ணீர் -புண்ணோடுசம்பந்தப்பட்ட நீர்;எனவே, இரத்தமாம். எல்லாம்என்பது, இங்குப் பலபொருள்குறியாது ஒருபொருளின் பலவிடங் குறித்துநின்றது. அம்புபடும்பொழுதே புண்ணும் உடனே நிகழுமென்க. ஊனுடனுகுபுண்ணீர் என்றும் பாடம். (580) |