பக்கம் எண் :

368பாரதம்ஆரணிய பருவம்

தற்கரிய தென்றும்,அதனைவீமன்கடந்துவந்தது வியக்கத்தக்க தென்றும்
விளங்கும்.  ஓதை-மதில், ஓதை-பலவகைஓசைகளையுடையஎன்றும்
உரைக்கலாம்.  என்பெயர் தனதனாகுமாம்என்றது, எனது மிகப்பிரசித்தமான
பெயரின் சிறப்புக்குச் சிறிதும் ஏற்பதன்று இச்செய்கைகள்நிகழ்வது
என்றவாறாம். தநதன்-செல்வத்தைக்கொடுப்பவன்:வடசொல்.      (582)

81.அடுப்பனாமளகையையறிவின்மானுடன்
தொடுப்பனாம்பொருசரஞ்சூழ்ந்தசேனையைப்
படுப்பனாமதுகொடுபதுமந்தன்னைவந்து
எடுப்பனாமென்பெயரிராசராசனாம்.

     (இ-ள்.) அறிவுஇல் மானுடன்-விவேகமில்லாத ஒருமனிதன்,
அளகையை அடுப்பன்ஆம்-(நமது) அளகாபுரியைச் சேருவானாம்;பொரு
சரம் தொடுப்பன் ஆம்-போர்செய்வதற்குரிய அம்புகளைஎய்வானாம்;
அதுகொடு-அவ்வம்பினால்,சூழ்ந்த சேனையைபடுப்பன் ஆம்-
(தன்னைச்)சூழ்ந்த(நமது)சேனையைஅழிப்பானாம்; வந்து  பதுமந்தன்னை
எடுப்பன்ஆம் - வந்துதாமரைப்பூவை எடுத்துக்கொள்வானாம்;
(இப்படியிருக்க), என் பெயர் இராசராசன்ஆம் - எனதுபெயர் இராசராச
னெனப்படுவதாம்! (எ - று.) 

     எனதுஇராசராசனென்கிற பிரசித்தமானபெயருக்குப் பொருந்துவன
வல்ல, இத்தொழில்க ளென்பதாம்.  ராஜராஜனென்னும் வடசொல்லுக்கு-
இயக்கர்க்கு அரச னென்று பொருள்:ராஜர்-யக்ஷர்.             (583)

82.இந்திரனல்லனாமீசனல்லனாம்
சந்திரனல்லனாந்தபனனல்லனாம்
வந்தொருவலியிலா மானுடன்கொலாம்
கந்தருவரையெலாங் களத்தினூறுவான்.

     (இ-ள்.)(வந்த ஆள்), இந்திரன் அல்லன்ஆம்-தேவேந்திரனல்லனாம்;
ஈசன் அல்லன்ஆம்-சிவபெருமானல்லனாம்;சந்திரன் அல்லன் ஆம்
தபனன் அல்லன்ஆம் - சந்திரசூரியரல்லனாம்;ஒரு வலி
இலாமானுடன்கொல் ஆம் - வலிமையில்லாத ஒருமனிதனாம்;வந்து -
(இங்கு) வந்து, கந்தருவரை எலாம்-, களத்தில் நூறுவான்-போர்க்களத்தில்
அழிப்பானாம்!(எ - று.)

    முன்னிரண்டடிகளால், இந்திரன்முதற் கூறப்பட்ட நால்வரே தனது
நகரத்தில் தடையின்றி வரத்தக்கவ ரென்பது விளங்கும்.  இந்திரன்
தேவராசனாதலாலும்,சிவன் குபேரனுக்குநண்ப
னாதலாலும்,சந்திரசூரியர்
எங்கும் எப்பொழுதுஞ்சஞ்சரிக்குந்தன்னமய ராதலாலும் இவர்கள் அங்குச்
செல்லத்தக்கவராவரென்க.  தபநன் என்னும் வடசொல்லுக்கு - தபிப்பவன்
[வெய்தாய்விளங்குபவன்]என்று பொருள்.  ஒருவலியிலாமானுடனென்றது,
மனிதகணத்தாரின் ஆற்றல் தேவகணத்தாரினாற்றலினும்குறைவுபாடுடைய
தென்னுங்கருத்தால்.                                     (584)