பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்379

102.-குபேரன்தருமனைநோக்கிக்கூறியமுகமன்.

அத்தினபுரிதனக் கதிபநீவர
இத்தினமென்றவப் பயனிருந்தவா
நித்தனையெனதுயிர்நேயநண்பினால்
ஒத்தனையெனவிவையுரைசெய்தானரோ.

     (இ-ள்.)'அத்தினபுரிதனக்குஅதிப - அஸ்தினாபுரிக்குஅரசனே!
[தருமனே!]இ தினம் - இன்றையதினத்தில், நீ வர - நீ (இங்கே) வரும்படி,
என் தவம் பயன் இருந்த ஆ(று) - எனதுதவத்தின்பயன் இருந்தவிதம்
(வியக்கத்தக்கது)!  எனது உயிர் நேயம் நண்பினால்- என்னுடைய
உயிரோடொத்த அன்புள்ளசிநேகத்தால்,  நித்தனைஒத்தனை-
அழிவில்லாத சிவபிரானையொத்தாய்,'என - என்று, இவை -
இவ்வார்த்தைகளை,உரை செய்தான் -(குபேரன் தருமனைநோக்கிக்)
கூறினான்;(எ-று.)

     ஆ -விகாரம்.  சிவபிரான் முன் எனக்கு நண்பானதுபோல,
இப்போது நீயும் நண்பனானாயென்பதுகருத்து.  நித்தன் - நித்யன்.

வேறு.

103.-இரண்டுகவிகள்- ஒருதொடர்: குபேரன்
அருச்சுனன்செய்தியைக்கூறி, தருமபுத்திரனுக்குத்
தாமரைமலருடன்விடையுங்கொடுத்தனுப்புதல்.

நெருந லிந்திரபு லிந்திரனும் யாமு நீடவையி ருந்தபின்பு,
உருநலந்திகழும் விசய னென்னவவ ணொருவனெய்துதலு
                                    மவனையித்,
திருநலம்புதிய செம்மல் யாவனென மற்ற வன்செயலும்
                                    வெற் றியும்,
குருகுலம்பெறுகு லேச னென்பதுவு நின்ற வானவர்கள்
                                       கூறினார்.

     (இ-ள்.)நெருநல்-நேற்று, இந்திர புரத்தில் - தேவேந்திரனுடைய
அமராவதிபட்டணத்திலே, நீடு அவை - பெரிய (சுதர்மையென்னுஞ்)
சபையிலே, இந்திரன்உம் - தேவேந்திரனும், யாமஉம் - நாமும், இருந்த
பின்பு-வீற்றிருந்தபின்னர், உரு நலம் திகழும்-வடிவத்தின் அழகு
விளங்குகிற, விசயன் என்ன - அருச்சுன னென்று, ஒருவன் - ஒருமனிதன்,
அவண் - அவ்விடத்தில், எய்துதலும் - வந்தவளவிலே,-அவனை-
அவனைக்குறித்து,திரு நலம் புதிய இ செம்மல் யாவன் என - 'அழகின்
பெருமையையுடைய புதியவனாகியஇவ்வாண்மகன் யாரோ?'என்று(யான்)
வினாவ,நின்ற வானவர்கள்-அங்குநின்ற தேவர்கள், அவன் செயல்உம் -
அவனுடைய செய்கைகளையும், வெற்றிஉம்-(அவனது) சயத்தையும், குரு
குலம் பெறு குல ஈசன் என்பதுஉம் - குருவமிசம் பெற்ற
அக்குலத்துத்தலைவனிவனென்பதையும், கூறினார்- சொன்னார்கள்;  
(எ-று.)

     செம்மல் -ஆண்பாற்சிறப்புப்பெயர்.  மற்று-அசை.  நெருநல் -
இறந்தகாலங் குறிப்பதொர் இடைச்சொல்.  வெற்றி - நிவாதகவசர்