காலகேயர்வதை. உருநலந்திகழு மதனராசனென வொருவனெய்திட என்றும்பாடம். இதுமுதல்ஒன்பதுகவிகள்-பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ் சீர்கள் மாச்சீர்களும், ஏழாவது விளச்சீரும், மற்றவை விளங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள். (605) 104. | அந்தவிண்ணுலகினின்றுநின்றுணைவமைரர்சூழவர நாளையே, இந்தமண்ணுலகுநீயும்வாழ்வுபெற விந்திரன்றனுடனெய் துமால், எந்தமண்ணுலகுநின்னதாகுமிடருற்றிரங்கலெனமகிழ் வினிற், கந்தவண்ணமலருங்கொடுத்துவிடைநல்கினானளகை காவலன். |
(இ - ள்.)'நின்துணைவன்-உனதுதம்பியான அவ்வருச்சுனன், அந்த விண் உலகினின்று - அத்தேவலோகத்திலிருந்து, அமரர் சூழ வர-தேவர்கள் சுற்றிலும் உடன்வரும்படி, நாளைஏ-நாளைத்தினமே [மிகவிரைவிலே],இந்த மண் உலகுஉம் நீஉம் வாழ்வு பெற-இந்தப்பூலோகமும் நீயும் சிறந்த வாழ்க்கையடையும்படி, இந்திரன்தனுடன்-தேவேந்திரனுடனே, எய்தும்- வருவான்;ஆல்-ஆதலால், எந்த மண் உலகுஉம் - பூலோகம் முழுவதும், நின்னது ஆகும் - (பின்பு) உன்னுடையதாய்விடும்;இடர் உற்று இரங்கல் - துன்பமடைந்து வருந்தாதே,'என - என்று (தருமனைநோக்கிக்)கூறி, அளகை காவலன் - அளகாபுரிக்கு அரசனானகுபேரன், மகிழ்வினின்- மனமகிழ்ச்சியுடனே, கந்தம் வண்ணம் மலர்உம் கொடுத்து- வாசனையையும் நிறத்தையுமுடைய அத்தாமரைப்பூவையும் (அவனுக்குக்) கொடுத்து, விடை நல்கினான்-(மீண்டுசெல்லுதற்கு)அனுமதியுங் கொடுத்தான்;(எ-று.) துரியோதனனோடுசேர்ந்த துஷ்டர்கள்பலரையும் அழித்து நல் லவர்களையோம்புதலால், 'இந்தமண்ணுலகும்நீயும்வாழ்வுபெற' எனப்பட்டது. மலரும், உம்மை-உயர்வுசிறப்பு;எச்சப்பொருளதுயாம். (606) 105.-என்தம்பிஇளமையாற்செய்த குற்றங்களைப் பொறுப்பாயென்றுகுபேரனிடம் வேண்டிக்கொண்டு தருமன்புறப்பட்டுப்போதல். ஐயநின்னையறியாமனின்னகரிலணுகினன்சிறுவனாதலின், செய்ததீமைகள்பொறுத்தியொன்றுநனிதிருவுளத்திடை கொளேலெனா, மொய்கொடாமமுடியுறவணங்கிமுடி மன்னர்மன்னனிளை யோரெடும், மைதவழ்ந்துலவுமாடநீள்புரிசை ஞாயில்வாயிறனிலெய்தினான். |
(இ-ள்.)'ஐய- தலைவனே!நின்னைஅறியாமல்-உன்பெருமையை அறியாமல், சிறுவன் - இளையவனானவீமன், நின் நகரில் அணுகினன்- உனது அளகாபுரியில் வந்துசேர்ந்தான்;ஆதலின் - ஆகையினால்,செய்த தீமைகள் பொறுத்தி-(அவன்)செய்த குற்றங்களைப்பொறுத்தருள்வாய்;திரு உளத்திடை ஒன்றுஉம் நனி |