பக்கம் எண் :

துருவாசமுனிச்சருக்கம்387

வன்போலப்பெருந்திருத்தி யடைந்து தான் வந்த காரணத்தைக் கூறிவிட்டுத்
தன்தபோவனத்துக்கு மீண்ட செய்தியைக் கூறும் பகுதி யென்க.

1.-துருவாசமுனிவன்பாண்டவரிருந்த காட்டில்
வந்தடைதல்.

சாபத் தாலுஞ்சாபமொழி தன்னால்வளருந் தவத்தாலும்,
கோ பத்தாலும் பேர்படைத்த கொடிய முனிவன் றுருவாசன்,
தீபத் தான்மெய்வகுத்தனையான்றிகழ்பன் முனிவர் புடைசூழ,
ஆபத் தால் வந்தடைந்தவர்போ லடைந்தா னந்த
                                     வடவியின்வாய்.

    (இ - ள்.) சாபத்தால்உம் - சாபத்தைக் கொடுப்பதனாலும், சாபம்
மொழிதன்னால் வளரும் தவத்தால்உம் - (அங்ஙனம் பிறருக்குக்
கொடுக்கின்ற) சாபமொழியினாலே வளர்கின்ற தவத்தினாலும்,
கோபத்தால்உம்-கோபத்தினாலும், பேர் படைத்த-பிரசித்திபெற்ற, கொடிய-
கொடுமையையுடைய [கண்டவர் அஞ்சத்தக்க], முனிவன்-இருடியும்,
தீபத்தால் மெய் வகுத்து அனையான்-தீபத்தைக்கொண்டு உடம்பைச்
செய்திட்டாற்போல ஒளிவடிவாய் விளங்குபவனுமாகிய, துருவாசன்-,-திகழ்
பல் முனிவர் புடை சூழ-(தன்னைப்போலவே பிரமதேஜசினால்) விளங்குகிற
பல இருடியர் (தன்னைச்) சுற்றிவர, ஆபத்தால்-பெருந்தீங்கு நேரிட்டதனால்,
வந்து அடைந்தவர்போல்-வந்து சேர்ந்தவர்போல, அந்த அடவியின் வாய்-
அந்தக் காட்டிலே, அடைந்தான்-(பாண்டவரை) வந்து சேர்ந்தான்; (எ-று.)

    துருவாசமுனிவன் செந்நிறமுள்ளவ னாதலால், 'தீபத்தால் மெய்
வகுத்தனையான்' என்றார்: இனி, கோபாக்கினி சொலிக்கின்ற
மேனியையுடைமையால் இவ்வாறு கூறியது எனினுமாம்.  பன் முனிவர்
என்றதை, முதனூலிற்கு ஏற்ப, சீடரான பதினாயிரம் முனிவரைக்
காட்டுமென்னலாம்.  மிக்க பசியினால் விரைந்துவந்தானென்பார்
'ஆபத்தால்வந்தடைந்தவர்போல் அடைந்தான்' என்றார்.
மற்றைமுனிவர்க்குப் பிறரைச்சபித்தலால் தவங் குறையும்:
துருவாசமுனிவனோசபிக்கச்சபிக்கத் தவம்வளருமாறு வரம்
பெற்றுள்ளதனால் பெருங்கோபமுடையனாய்ச்சபிக்கும்இயல்புள்ளவ
னென்ப.

     இதுமுதல்இச்சருக்கமுடியுமளவும் பதினேழுகவிகள்-பெரும்பாலும்
மூன்று ஆறாஞ்சீர்கள்காய்ச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த
கழிநெடிலடி நான்குகொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்.

2.-பாண்டவர் வந்ததுருவாசமுனிவரின் அடிபணிந்து
முகமன்கூற, அன்னான்அவர்கட்கு ஆசிகூறுதல்.    

அருமாதவப்பேறானதெமக்கம்மாவென்னச்செம்மாந்து
குருமாமரபோரைவருந்தங் குஞ்சித்தலைமேலடிவைத்தெம்
பெருமானிங்கேயெழுந்தருளப் பெற்றேமென்னப்பெரிதுவந்தங்கு
அருமாமுனியைப்பூசித்தா ரவனும்புகன்றானாசியரோ.