என்றார். 'முன்னேநுகர்ந்தாம்'என்று திரௌபதியும், 'மேவாருரைக்க விவன்வந்ததல்லாற் பிறிதுவேறில்லை'என்று வீமசேனனும், 'சுனைநீர்படிந்துவரச்சொல்லிக்கருதிநாம் பிறபுரியுமது கடனோ?'என்று விசயனும் கூறியதுபோல இந்தத்தருமன் ஒருவர்மீதும் குற்றங் கூறவில்லையென்பார்'தப்போதாமல்'என்றார். (623) 10.-ஸ்ரீக்ருஷ்ணன்வினவ, திரௌபதி சோற்றுப்பருக்கை யொன்றிருந்ததைஅப்பிரான்கையிற்கொடுத்தல். திருக்கண்கருணைபொழியவருந்திருமாலவரைத்தேற்றிமுதல் அருக்கனுதவும்பாண்டத்தி னன்னமுளதோவெனவினவ முருக்கினிதழைக்கருக்குவிக்கு முறுவற்செவ்வாய்த்திரௌபதியும் இருக்குமுறையோரன்னங்கண்டெடுத்தாள்கொடுத்தாளிறைவன்கை |
(இ - ள்.)திரு கண்-(தன்னுடைய) அழகிய கண்களினின்று, கருணை பொழிய - கருணைவெளிப்பட்டுச்சொரிய,வரும்-(அப்போது) வந்த, திருமால்-ஸ்ரீக்கிருஷ்ணன், அவரை - அந்தப்பாண்டவரை, தேற்றி-துயரம் மாற்றி,-'முதல்- முன்பு [ஆரணியவாசஞ்செய்ய ஆரம்பித்த காலத்தில்], அருக்கன்-சூரியபகவான், உதவும்-உதவிய, பாண்டத்தின்-அட்சய பாண்டத்திலே, அன்னம் உளதுஓ-சோறு உள்ளதா?'என வினவ-,- முருக்கின் இதழை கருக்குவிக்கும் செம்முறுவல் வாய் திரௌபதிஉம்- (செந்நிறமுள்ள) பலாசமலரையும் கருநிறமுள்ளதென்று சொல்லுமாறு மிகச்சிவந்துள்ளமந்தகாசத்தோடு கூடிய வாயையுடையதிரௌபதியும், இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டு - ஒட்டிக்கொண்டிருக்கும் முறையில் ஒரு சோற்றுப்பருக்கையிருந்ததுகண்டு, எடுத்தாள்-எடுத்து, இறைவன் கைகொடுத்தாள்-கடவுளமிசமான அந்த ஸ்ரீக்ருஷ்ணன் கையிற்கொடுத்தாள்; (எ-று.)-அன்னம் என்பதற்கு - உண்ணுதற்கு உரியபொருள் எனப்பொருள் கொண்டு,முதனூலுக்கு ஏற்பக் கீரைத்துணுக்கையைக் காட்டுமென்றலும் உண்டு. (642) 11.-அந்தச்சோற்றுப்பருக்கையை ஸ்ரீக்ருஷ்ணன் தன்வாயிற்கொள்ள,நீராடச்சென்ற முனிவர் உண்டவர்போலத்திருப்தியடைதல். அந்தவன்னஞ்சதுர்மறையு மன்னமாகியருள்செய்தோன் முந்தவுலகமுழுதுண்ட முளரியிதழினிடைவைத்தான் வந்துசுனையில்வந்தனைசெய்மறையோரெவரும்வாரிதிமுன் தந்தவமுதுண்டவர்போலத் தாபந்தணிந்துதண்ணென்றார். |
(இ - ள்.)அந்த அன்னம்-அந்தச் சோற்றுப்பருக்கை, சதுர் மறைஉம்- நான்குவேதங்களையும்,அன்னம் ஆகி - அன்னப்பறவை வடிவமாய், அருள்செய்தோன்-அருளிச்செய்தவனாகியதிருமாலினமிசமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன்,-முந்த - முன்பு [பிரளயகாலத்தில்],உலகம் முழுது உண்ட- உலகங்களையெல்லாம்உட்கொண்டருளிய, முளரி இதழின்இடை - தாமரையிதழ்போன்ற (தனது) |