பக்கம் எண் :

துருவாசமுனிச்சருக்கம்397

    (இ-ள்.)'உலகம்முழுதுஉம்-உலகம்முழுவதையும்,பரம்கொண்டு-
தாங்குந்தொழிலைமேற்கொண்டு, இசை பரப்பி - கீர்த்தியை (உலக
முழுவதிலும்) பரவச்செய்து, புரப்பான்-பாதுகாக்குந்தன்மைவாய்தவனான,
பாண்டு எனும் - பாண்டுஎன்கிற, உரங்கொண்டு உயர்ந்தோன்-
வலிமையினால்மேம்பட்டவனானஅரசன், அளித்தருளும் - பெற்ற,
உரவோய்-வலிமையுள்ளவனே! நீ-, இங்கு - இப்போது, உனக்குஆன-
உனக்குவிருப்பமான, வரம் - வரத்தை,கொண்டிடுக-(என்னிடம்)
பெற்றுக்கொள்க,'என - என்றுசொல்ல,-வளையாசெங்கோலான் -
நீதிநெறிதவறாதசெங்கோலையுடையவனானதருமபுத்திரன், முனியை-
துருவாசமுனிவனை,வணங்கி-, 'பகைத்தோர்-(எம்மைப்)பகைத்தவரான
துரியோதனாதியரின்,மாற்றங்கள்-வார்த்தைகளை,திரம்கொண்டு-
உறுதியாகக்கொண்டு, ஒன்றுஉம் கொள்ளாதி-ஒருசிறிதும் (எம்மீது) மாறுபாடு
கொள்ளாதிருப்பாய்,'என்றான்- என்று வரம்வேண்டினான்;(எ-று.)

     வளையாச்செங்கோலானாதலால்,துரியோதனாதியர்அழியுமாறு வரம்
வேண்டினானில்லையென்க.  திரங்கொண்டென்றுங் கேளாதி என்றும்பாடம்.  
                                                       (630)

17.-துருவாசமுனிவனும்ஸ்ரீக்ருஷ்ணனும்
தந்தமிடத்துக்குச்செல்ல, தருமன் தம்பியரோடும்
திரௌபதியோடும்வனத்துத் தனியிருத்தல்.

அன்னோன்மொழிகேட்டம்முனியுமடைந்தான்றன்பேரருந்தவக்கான்
முன்னோனானமுகுந்தனுந்தன்முந்நீர்த்துவரைநகர்புக்கான்
பின்னோர்வணங்கப்பேரழலிற்பிறந்தாண்மகிழப்பேரருட்குத்
தன்னோடொருவர்நிகரில்லானிருந்தானந்தத்தனிவனத்தே.

     (இ - ள்.)அன்னோன்மொழி கேட்டு - அந்தப் தருமபுத்திரனுடைய
வார்த்தையைக் கேட்டு, அ முனிஉம்-அந்தத்துருவாசமுனிவனும், தன் பேர்
அருந் தவம் கான்-தனக்குரிய பெரிய அரியதவத்திற்குஉரியகாட்டை,
அடைந்தான்-;முன்னோன்ஆன முகுந்தன் உம்-(யாவர்க்கும்)
முற்பட்டவனானதிருமாலினமிசமான ஸ்ரீக்ருஷ்ணனும், தன்-தன்னுடைய,
முந்நீர் துவரைநகர் - கடலினாற்சூழப்பட்டுள்ளதுவாரகாபுரியை, புக்கான்-
அடைந்தான்;பேர் அருட்கு தன்னோடுஒருவர்நிகர் இல்லான்-
மிக்ககருணைக்குத்தன்னோடுஒருத்தரும்ஒப்பானவரைப் பெறாதவனான
தருமன்,பின்னோர்வணங்க-தம்பிமார் வணங்கவும், பேர் அழலில்
பிறந்தாள்-பெருமைபெற்றயாகாக்கினியிலே தோன்றினவளான திரௌபதி,
மகிழ-மகிழ்ச்சியடையவும், அந்த தனிவனத்தே-ஒப்பற்றஅந்தவனத்திலே,
இருந்தான்-தங்கியிருந்தான்;(எ-று.) வந்தவர்கள்சென்றிட்டதனால்வனத்தே
தனியிருந்தானென்றாரெனினுமாம்.                            (631)

துருவாசமுனிச்சருக்கம்முற்றிற்று.

-----