பக்கம் எண் :

பழம்பொருந்துசருக்கம்411

லன்றி நினைத்தலாற்குற்றமில்லையென்பது துவாபரயுகதருமமாதலாலென்பர்.
நம்புதற்குளதோ என்றும் பாடம்.இச்செய்யுளின்கருத்தையொட்டியவடமொழிச்
சுலோகம்-"பஞ்சமே பதயஸ்ஸந்தி-மஹயம் ஷஷ்டோபி ரோசதே| புருஷாணா
மபாவேந-ஸர்வாநார்ய:பதிவ்ரதா."என்பது.  கன்னடபாரதம், திரௌபதி
தன்னுள்ளக்கிடக்கையென்று "ஸுந்தரம்புருஷம்த்ரஷ்ட்வா - பிதரம்ப்ராதரம்
ஸு தம் | யோநிர்த்தவதிநாரீணாம்- ஸ்த்யம்ப்ரூமீஹகேஸவ"என்பதைச்
சொல்ல, அப்போது அந்தக்கனி மேலேசெல்லாததாக, 'நங்காய்!
உன்மனத்திலுள்ளதை யொளியாமற் கூறுவாய்'என்று ஸ்ரீக்ருஷ்ணன்சொல்ல,
பிறகு, "பஞ்சமேபதய:"என்ற இதைக் கூறினாளென்னும்.           (652)

22.-கவிக்கூற்று: க்ருஷ்ணன்கேட்கஅறுவரும் உண்மை
யுரைத்ததால் பறித்தகனி முறைமுறையாகக்
கொம்பை யணைந்ததெனல்.

அறுவருமிவ்வாறுண்மையேயுரைத்தா ராதலானிரைநிரைப்
                                       படியே,
மறுவணிதுளபமார்பனுங்கேட்டான் மாமுனிக்கோதனமான,
நிரைசுவையமுதநெல்லியின்கனியுநின்றகொம்பணைந்த
                                   தாலென்றும்,
பெறுமுறைபெறுமேயுள்ளவாறுரைத்தாற்பெரியவர்பேசும்
                                      வாசகமே.

     (இ-ள்.) மறுஅணி-ஸ்ரீவத்ஸமென்கிற மறுவையணிந்த, துன்பம்-
துளசிமாலையைப்பூண்ட,மார்பன்உம்-மார்பையுடைய ஸ்ரீக்ருஷ்ணனும்,
கேட்டான்-(மனத்திலுள்ளதை உள்ளபடியே கூறுமாறு) வினாவினான்:
அறுவர்உம்-பஞ்சபாண்டவரும் திரௌபதியும், இ ஆறு-இவ்வகையாக
[கீழ்க்கூறியபடி],உண்மைஏ உரைத்தார்-தம் மனத்திலுள்ள
சத்தியமானகொள்கையையே சொன்னார்கள்: ஆதலால்-,நிரை நிரை படிஏ
- வரிசைவரிசையான முறையாக, மா முனிக்கு ஓதனம் ஆன நிறை சுவை
அமுதம் நெல்லியின் கனிஉம்-சிறந்த அமித்திரமுனிவனுக்கு உணவான
நிறைந்த சுவையுள்ள அமுதம் போன்ற நெல்லிக்கனியும், நின்ற-
அந்தவனத்திலேயிருந்த (நெல்லிமரத்தின்), கொம்பு-கிளையை,அணைந்தது-
சேர்ந்திட்டது:ஆல்-இது என்னே! என்றுஉம் - எப்போதும், பெரியவர்-
பெருமையுள்ளோர், பேசும்-பேசுகின்ற, வாசகம் - வார்த்தை, உள்ள ஆறு
உரைத்தால்-உண்மையாக உரைக்கப்படுமாயின், பெறும்-
பாராட்டப்படுதற்குஉரிய, முறை-முறைமையை, பெறும்-அடையும்;(எ-று.)

    நிரைநிரைப்படியே கொம்புஅணைதலாவது-மரத்திற்கனியிருந்த
இடத்திற்கும் இப்போது கனியுள்ள இடத்திற்குமுள்ள தூரத்தை
ஆறாகப்பகிர்ந்துகொண்டு,தருமன் தன்மனக்கிடக்கையைக் கூறியதும்
ஒருபகுதிமுன்னேறுதல், மற்றொருவர்கூறியதும் மற்றொருபகுதி
முன்னேறுதல் என்று இவ்வாறாகச்சென்றுஆறாமவர்கூறியதும்கனிஇருந்த
இடத்திற்போய் ஒட்டிக்கொள்ளுதல்.  முதல்மூன்றடிகளிற்
கூறியசிறப்புப்பொருளைஈற்றடியிற்கூறியபொதுப்பொருள்சமர்த்தித்துநின்றது
- வேற்றுப்பொருள்வைப்பணியாம்.  ஆல்-வியப்புக்குறிப்பிடைச்சொல்.
அறுவருமிவ்வாறுரைத்தனருண்மை யவரவர் நினைவினின்படியேஎன்று
பிரதிபேதம்.                                            (653)