(இ-ள்.) (உமதுசொற்கேட்டு), யான்-, தொடங்கி-ஆரம்பித்து'புரி - செய்கின்ற, தீவினை- தீச்செயல், (அதன்பயனால்),என்னைஏ சுடுவது அல்லது - என்னையேஎரித்தொழிப்பதல்லாமல், கொற்றம் மடங்கல் போல்பவர் தங்கள்மேல் - வெற்றிபொருந்தியசிங்கத்தை யொப்பவர்களாகிய பாண்டவர்கள் மீது,செல்லும்ஓ-(பயனைவிளைக்குமாறு)செல்லவல்லதோ? [செல்லவல்லதன்று];(ஏனெனில்), மாயவன் இருக்கின்றான்-(தீவினைப்பயன் அந்தப்பாண்டவர்கட்கு நிகழாத வாறுபாதுகாக்க) ஸ்ரீக்ருஷ்ணன் இருக்கின்றான்:இடம் கொள் பார் அகம் பெறுவதற்கு - விசாலமாகவுள்ள பூமியினிடத்தை (ப்பாண்டவர்கட்குக்கொடாமல் நமக்கேஉரியதாக) ப்பெறும்படி, எண்ணும்-ஆலோசிக்கின்ற, நின்-உன்னுடைய, இச்சையின்படி- விருப்பத்தின்படி, ஏகி-(நான்) சென்று, விடங்களால்-, உயிர் ஒழிப்பவர்க்கு ஒத்து-(தம்) உயிரை மாய்த்துக்கொள்பவரைப்போன்று, நான்-, வீவது ஏ- சாவதே, மெய் - உண்மையாய் நிகழும் செயலாகும், என்றான்-; உன்சொற்கேட்டுப் பாண்டவர்களைஅபிசாரயாகம் செய்து கொல்லமுயன்றேனேயானால்ஸ்ரீக்ருஷ்ணபகவான் தீவினைப்பயனை நணுகவொட்டாது செய்தற்குப்பாண்டவர்பக்கல்உள்ளதனால்"தன்வினை தன்னைச்சுடும்"என்றவாறு அத்தீவினைப்பயன்என்னையேசுட்டு என்னுயிரை அழிப்பது திண்ண மென்று காளமாமுனிவன் பதில்கூறினா னென்பதாம். உயிரொழிபவரொத்து என்ற பாடம் ஏற்கும். (664) 11.-யாவரும்பணிந்துவேண்டி முனிவனைஅபிசாரவோமம் செய்யஇசையுமாறுசெய்தல். அசைவிலாமனத்தருந்தவ முனிவனையனைவரும்பணிந்தேத்தி, இசையுமாறுசெய்தோமவான்பொருள்களுக்கியாவும்வேண்டுவ நல்கத், திசையெலாமுகமுடையவ னிகர்தவச்செல்வனுஞ்சென்றான் வெவ், வசையினான்மிகுகொடியகோலரசனுமகிழ்ந்துதன்மனை புக்கான். | (இ - ள்.) அசைவு இலா மனத்து - சலித்தலில்லாத மனத்தை யும்,அருந் தவம்-(பிறக்குக்குச்செய்தற்கு) அரிய தவத்தையுமுடைய, முனிவனை- காளமாமுனிவனை,அனைவர்உம்- (துரியோதனன் கர்ணன் சகுனி துச்சாதனன் என்ற) நால்வரும், பணிந்து - வணங்கி, ஏத்தி - புகழ்ந்து, இசையும் ஆறு செய்து-(அபிசாரவேள்வியையியற்றுவதற்கு) உடன்படும்படி செய்து, ஓமத்துக்கு வேண்டுவ வான் பொருள்கள் யாஉம் நல்க-வேள்விக்கு வேண்டுவனவாகிய சிறந்த பொருள்கள் எல்லாவற்றையும் தர,-திசை எலாம் முகம்உடையவன் நிகர் தவம் செல்வன்உம் - நான்குதிக்கையும் நோக்கிய நான்குமுகங் களையுடையவனான பிரமதேவனையொத்தஅந்தத் தபோதனனும், சென்றான்- (அபிசாரவேள்வியைச் செய்யும்படி)போனான்:வெவ்வசையினால்மிகு - (உலகத்தாரின்) கொடிய பழிப்பினால்மிகப்பெற்ற, கொடியகோல் அரசன்உம் - கொடுங்கோலரசனானதுரியோதனனும், |