சிறுவன்ஆங்குப்புகுந்துஅபயம் என அழுது புலம்புதலும், மகனும் நால்வரும் சிலையோடுஅம்பேந்தி, புலிபோல் அதனைத்தொடர்ந்தார் என்க. முனிகுமாரன்பிரமசாரி யாதலால், தனதுபிரமசரியநிலைக்குஏற்றபடி வேதத்தை ஓதிக்கொண்டிருக்கின்றன னென்பார், அவனை'மறை வாய்ச்சிறுவன்'என்றார். பொறை-(பூமியைப்) பொறுப்பது [சுமப்பது]என மலைக்குக்காரணப்பெயர்:'ஐ'என்னும் கருத்தாப் பொருள் விகுதிபெற்றபெயர்:'தரணீதரம்'முதலிய வடமொழிப் பெயர்களாலும் மலை பூமியைத் தாங்குதலாதல் பெறப்படும். பொறைவாய், வாய்-ஏழனுருபு. நறைவாய், வாய் - ஏழாம்வேற்றமை யிடப்பொருளுணர நின்ற இடைச்சொல். தொடையல் என்பதில், அல் - சாரியை. தொடை-(பூக்களைக்கொண்டு) தொடுக்கப்படுவது என மாலைக்குக்காரணப்பெயர்;தொடு-பகுதி, ஐ- செயப்படுபொருள்விகுதி. தீவினைசெய்தோர்களைநரகத்திலே தண்டித்துத் தருமத்தை நிலைநிறத்துதலால்,யமதருமராஜனை'அறன்'என்றார்:அறன்- அறத்தைக் காப்பவன். நால்வர்என்பதில், வ் - பெயரிடைநிலை. துறை- விற்களைஉபயோகிக்கவேண்டிய வழி. நான்காமடியில், வாய்-வாய்த்தல்: முதனிலைத்தொழிற்பெயர். வாய்ச்சிலை- வாய்த்தலையுடையசிலைஎன இரண்டாம்வேற்றுமை யுருபும்பயனும் உடன்தொக்கதொகை. சூழ்புலி- வினைத்தொகை. 19.-ஓடியமானின்செயலால் தளர்ந்து பாண்டவர் அதைத் தொடர்தலில்ஆசையொழிதல். அகப்பட்டதுபோன்முன்னிற்கு மருகெய்தலுங்கூராசுகம்போல், மிகப்பட்டோடுந்தோன்றாமல்வெளிக்கேயொளிக்கும் விழியிணைக்கும், முகப்பட்டிடுமீண்டைவருந்தம் முரண்டோள்வன்மைதளர் வளவும், தகைப்பட்டொழிந்தாரதிலாசை யொழிந்தாரிந்த்ரசாலமெனா. |
(இ-ள்.) (தோலைக்கவர்ந்துகொண்டுசென்ற மான்),- அகப்பட்டதுபோல்-(கையில்) அகப்பட்டுவிட்டதுபோல், (பாண்டவர்களின் அருகிலே), முன் நிற்கும்-முன்னே வந்துநிற்கும்:(அந்தப் பாண்டவர்கள்), அருகு-(தன்) சமீபத்தில், எய்தலும்-வந்து சேர்ந்தவுடனே, கூர் ஆசுகம் போல்-கூரிய அம்புபோல, மிக பட்டு ஓடும்-மிகப்பொருந்தியோடும்: தோன்றாமல்-(கண்ணுக்குத்)தெரியாமல், வெளிக்கே-வெளியில், ஒளிக்கும்- (தன்னை)ஒளித்துக்கொள்ளும்;மீண்டு-மறுபடியும், விழி இணைக்கும்உம்- இரண்டுகண்களுக்கும், முகம்-எதிரில், பட்டிடும்-பொருந்திநிற்கும்; (இவ்வாறுஅந்தமானினால்),ஐவர்உம்-பஞ்சபாண்டவர்களும், தம் - தம்முடைய, முரண்வலிமையையுடைய, தோள் - தோள்களின், வன்மை- பலமானது, தளர்வுஅளவும்-தளர்தலையடையும்வரையிலும், தகைப்பட்டுஒழிந்தார்-(தொடர்ந்து பிடிக்கமுடியாமல்) தடுக்கப்பட்டுத் தீர்ந்தார்கள்;(பிறகு தோள்வலிமைதளர்ந்ததனால்),இந்த்ரசாலம்எனா- (இந்த மானின்செய்கை) இந்திரஜாலம்போலுமென நினைத்து,அதில்-அந்த மானைத்தொடர்தலில்,ஆசை ஒழிந்தார்-ஆசைநீங்கினார்கள்;(எ-று.) |