பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்447

மென்ற பொருளில்வருதலை,"சேதனமென்னுமச்சேறகத்தின்மையால்"
என்றநாலடியாரிலுங் காண்க.  சேறிலாத வெஞ்சுரம் எனவே, நீர்நிழலில்லாத
பாலைவனம்என்றவாறாயிற்று. தருமபுத்திரன் தன்னிலுஞ்சிறியவரான விமன்
முதலியோரை 'பெரியோர்' என்றது-அன்னார்உடம்பின்வலிமை
முதலியவற்றாற்பெருமைபெற்றவராதலால்.                       (703)

50.-வீமன்எழுதியதைக் கண்டு தருமன்
செய்தியையறிதல்.

அண்டகோளகையனையதோ ராதபத்திரத்தான்
மண்டலங்களீரொன்பதும் புரந்திடவல்லான்
சண்டமாருதியெழுதிய தாழ்மணலெழுத்தைக்
கண்டுநஞ்சமிக்கயத்தற லென்பதுகண்டான்.

     (இ - ள்.)அண்டகோளகை அனையது- அண்டகோளத்தை
ஒப்பதான, ஓர் ஆதபத்திரத்தால் - ஒப்பற்ற குடையினால்,மண்டலங்கள் ஈர்
ஒன்பதுஉம்-பதினெட்டுப்பூமிகளையும்,புரந்திட-பாதுகாத்தற்கு, வல்லான்-
வல்லவனாகியதருமபுத்திரன்,-தாழ் மணல்-குழிந்த மணலிலே, சண்டம்
மாருதி - கொடுந்தன்மையையுடைய வீமசேனன், எழுதிய-எழுதியிருந்த,
எழுத்தை-, கண்டு-பார்த்து, 'இகயத்து அறல்-இந்தச்சுனையிலுள்ளநீர்,
நஞ்சம்-விஷமாம்,'என்பது-என்பதை, கண்டான் - அறிந்தான்;(எ-று.)-
வல்லான், எழுத்தைக் கண்டு, என்பது கண்டான் என்க.

     வீமன்எழுதியதைப் படித்த பின் கயத்தைக்கண்டு தருமன் அதன்
நீரையும்நஞ்சுஉள்ளதென்று அறிந்தான்.  அண்டகோளகை-உருண்ட
வடிவமான அண்டம்.  திரண்டு ஓங்கியிருத்தலில்,ஆதபத்திரத்திற்கு
அண்டகோளகை உவமையாம்.  ஆதபத்திரம்=ஆதபத்ரம்;வெயிலினின்று
காப்பது எனக் குடைக்குக்காரணக்குறி.  மண்டலங்கள் ஈரொன்பதாவன:-
சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம்,
கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம்,
கடாரம், கௌடம், கோசலம், திராவிடம் என்பன.  அறல் நஞ்சம் -
உடைமையையும் உடையதையும் அபேதப்படுத்திக் கூறிய உபசாரவழக்கு.
நஞ்சம், அம்-சாரியை;நஞ்சு - நைதற்கு [இறத்தற்கு]க்காரணமானதெனக்
காரணப் பொருள் உரைக்கலாம்.  அறல் - நீர்:மணலைஅறுத்துச்செல்வது
எனக் காரணக்குறி.                                        (704)

            51.-தருமன்வீஷநிரைப் பருகச்செல்லுதல்.

வெஞ்சமஞ்செயவருவர்கொன் மீண்டுமென்றருளில்
வஞ்சகன்செய்தவஞ்சனையிதுவெனமதித்து
நஞ்சநீர்கொடுதானுந்தன் னாவினைநனைக்கும்
நெஞ்சனாகியந்நிறைபுனற்கயத்திடைநேர்ந்தான்.

     (இ - ள்.)'வெம்சமம் செய - கொடிய போரைச் செய்வதற்கு,
மீண்டுவருவர்கொல் - மறுபடியும் (பாண்டவர்கள்) வந்துவிடுவார்